
இந்த நிலையில் நேற்று பெங்களூருவில் நடந்த இந்திய ஜனநாய வாலிபர் சங்கத்தின் 11-வது மாநில மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பிரகாஷ்ராஜ், "கவுரி லங்கேஷ் கொலைக்கு வருத்தம் கூட தெரிவிக்காத மோடி என்னை விட சிறந்த நடிகர்" என்று பரபரப்பாக பேசினார். அவர் பேசியதாவது:
கர்நாடகாவில் முற்போக்கு சிந்தனை கொண்டு மூட நம்பிக்கைகளுக்கு எதிராக தனது பத்திரிக்கை மூலம் பல போராட்டங்களை நடத்தியவர் கவுரி லங்கேஷ். தனி நபர் சுதந்திரத்திற்காக குரல் கொடுத்த அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டு ஒரு மாதம் ஆகிறது.
ஆனாலும் குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. நாட்டில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களுக்குகூட டுவிட்டரில் கண்டம் தெரிவிக்கும் பிரதமர் நரேந்திர மோடி கவுரி லங்கேஷ்வர் கொலைக்கு மவுனம் சாதிப்பது ஏன்? அது நடிப்புதானே. நானே பன்மொழி நடிகன் இந்த விஷயத்தில் பிரதமர் மோடி என்னை விட சிறந்த நடிகராக இருக்கிறார்.
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டதை சமூக வலைதளங்களில் சிலர் கொண்டாடி வருகிறார்கள். அவர்கள் யார் எங்கு இருக்கிறார்கள்? அவர்களது சித்தாந்தம் என்ன? என்று எல்லோருக்கும் தெரியும்.
இந்த கொலையை கொண்டாடுவது மிகவும் கொடூரமானது. அவர்கள் பிரதமர் மோடியை தவிர வேறு யாரையும் பின்பற்றாதவர்கள். மோடி தனது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து மவுனமாக இருந்து வருகிறார் என்றார் பிரகாஷ்ராஜ்.
Post a Comment