Ads (728x90)

நீதி அமைச்சின் பொறுப்புக்களையும் அப்பதவியிலுள்ள பாரதூரமான நகர்வுகளையும் மிகவும் அவதானத்துடன் கற்று உணர்ந்து நிதானமாக செயற்படுத்தி வருகிறேன்.

நம்நாட்டில் நீதி மன்றங்களில் ஒரு கொலை வழக்கினை விசாரித்து தீர்ப்பினை வழங்க 17  வருடங்கள் செல்கின்றன. இந்த வீண் தாமதம் என் கவனத்தை ஈர்த்துள்ளது என நீதியமைச்சரும் இரத்தினபுரி மா வட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தலதா அத்துகோரள தெரிவித்தார்.

இரத்தினபுரி காவத்தை பிரதேசத்தில் நடைபெற்ற பல்வேறு அபிவிருத்தி தொடர்பான விடயங்களில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget