Ads (728x90)

அடுத்த மூன்று மாதங்­க­ளுக்குள் ஐ.நா.வின் இரண்டு உயர்­மட்டக் குழுவினர்  இலங்கை வரவுள்ளனர். உண்மையை ஊக்­கு­வித்தல், நீதி, இழப்­பீடு, மீள நிக­ழா­மையை உறு­திப்­ப­டுத்தல் தொடர்பாக ஐ.நா.வின் சிறப்பு அறிக்­கை­யாளர் எதிர்­வரும் 10 ஆம் திகதி இலங்­கைக்கு விஜயம் மேற்­கொள்­ள­வுள்ளார்.

அவர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை­யான காலப்­ப­கு­தியில் இலங்­கையில் தங்­கி­யி­ருந்து பல்­வேறு தரப்­பு­க­ளையும் சந்­தித்துப் பேசுவார். அத்­துடன்  அர­சாங்­கத்­துக்குத் தேவை­யான ஆலோ­ச­னை­க­ளையும் வழங்­குவார். அதே­வேளை, நியா­ய­மற்ற தடுத்து வைத்­தல்கள் தொடர்­பான ஐ.நா. பணிக்­கு­ழு­வினர் இலங்­கைக்கு  டிசெம்பர் 4 ஆம் திகதி  வர­வுள்­ளனர். டிசெம்பர் 15ஆம் திகதி வரை இந்தக் குழு இலங்­கையில் தங்­கி­யி­ருக்கும். இந்த இரண்டு பய­ணங்­க­ளையும் அர­சாங்கம் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது.

கடந்த ஜூலை மாதம் இலங்­கைக்கு பயணம் மேற்­கொண்­டி­ருந்த ஐ.நா.வின் சிறப்பு அறிக்­கை­யா­ளர்கள் பென் எமர்சன், மோனிகா பின்டோ, ஜூவான் டென்டஸ் ஆகியோர், இலங்­கையில் சித்­தி­ர­வ­தைகளும், மனித உரிமை மீறல்­களும் தொடர்ந்து இடம்பெறுவதாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget