Ads (728x90)

கத்­தோ­லிக்க திருச்­ச­பையின் வழி­பாட்டு ஒழுங்­கிற்கு அமைய திரு­வ­ருகைக் காலம், தவக்­காலம், உயிர்ப்புக் காலம் ஆகிய காலங்­களில் வரும் ஞாயிறு தினங்­க­ளிலும்

மற்றும் திருக்­காட்சி விழா, ஆண்­ட­வரின் திரு உடல் திரு இரத்தம், பரம திரித்­துவம், ஆண்­ட­வரின் விண்­ணேற்றம், பரி­சுத்த ஆவி விழா போன்ற பெரு­வி­ழாக்கள் வரும் ஞாயிறு தினங்­க­ளிலும் ஆலயப் புனி­தர்­களின் விழாக்கள் கொண்­டா­டப்­பட முடி­யாது என்று யாழ்.மறை­மா­வட்ட குருக்கள் மன்ற கூட்­டத்தில் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

 இந்த நடை­மு­றை­யினை அடுத்த வரு­டத்­தி­லி­ருந்து பின்­பற்ற வேண்டும் என்று யாழ்.மறை­மா­வட்ட ஆயர் கலா­நிதி ஜஸ்ரின் ஞானப்­பி­ர­காசம் ஆண்­டகை தலை­மையில் நடை­பெற்ற குருக்கள் மன்றக் கூட்­டத்தில் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது. புனி­தர்­களின் திரு­நாட்கள் அந்த ஞாயிறு தினத்­திற்கு முன்­ன­தான சனிக்­கி­ழ­மை­களில் கொண்­டா­டப்­ப­ட­லா­மென அறி­வு­றுத்­தப்­ப­டு­கின்­றது.

தவக்­கால ஞாயிறு தினங்­களில் இது­வரை கொண்­டா­டப்­பட்டு வந்த கச்ச தீவு, பாலை­தீவு, கற்­க­ட­தீவு, குரு­ச­டித்­தீவு போன்ற தீவு­களின் புனித அந்­தோ­னியார் திரு­நாட்­களும் அடுத்த வருடம் முதல் சனிக்­கி­ழ­மை­க­ளி­லேயே கொண்­டா­டப்­பட வேண்டும்.

புனி­தர்­களின் திரு­நாட்கள் மேற்­படி ஞாயிறு தினங்­களில் கொண்­டா­டப்­ப­டு­வதால் அந்த ஞாயிறு தினங்­களின் முக்­கி­யத்­துவம் மறுக்­கப்­ப­டு­வதை தடுப்­ப­தற்­கா­கவே திருச்­ச­பையின் வழி­பாட்டு ஒழுங்கில் இத்­த­கைய அறி­வு­றுத்­தல்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. இருப்பினும் பொதுக்காலங்களில் வரும் ஞாயிறு தினங்களில் புனிதர்களின் விழாக்கள் கொண்டாடப்பட அனுமதி வழங்கப்படுகின்றது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget