
மற்றும் திருக்காட்சி விழா, ஆண்டவரின் திரு உடல் திரு இரத்தம், பரம திரித்துவம், ஆண்டவரின் விண்ணேற்றம், பரிசுத்த ஆவி விழா போன்ற பெருவிழாக்கள் வரும் ஞாயிறு தினங்களிலும் ஆலயப் புனிதர்களின் விழாக்கள் கொண்டாடப்பட முடியாது என்று யாழ்.மறைமாவட்ட குருக்கள் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையினை அடுத்த வருடத்திலிருந்து பின்பற்ற வேண்டும் என்று யாழ்.மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் நடைபெற்ற குருக்கள் மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புனிதர்களின் திருநாட்கள் அந்த ஞாயிறு தினத்திற்கு முன்னதான சனிக்கிழமைகளில் கொண்டாடப்படலாமென அறிவுறுத்தப்படுகின்றது.
தவக்கால ஞாயிறு தினங்களில் இதுவரை கொண்டாடப்பட்டு வந்த கச்ச தீவு, பாலைதீவு, கற்கடதீவு, குருசடித்தீவு போன்ற தீவுகளின் புனித அந்தோனியார் திருநாட்களும் அடுத்த வருடம் முதல் சனிக்கிழமைகளிலேயே கொண்டாடப்பட வேண்டும்.
புனிதர்களின் திருநாட்கள் மேற்படி ஞாயிறு தினங்களில் கொண்டாடப்படுவதால் அந்த ஞாயிறு தினங்களின் முக்கியத்துவம் மறுக்கப்படுவதை தடுப்பதற்காகவே திருச்சபையின் வழிபாட்டு ஒழுங்கில் இத்தகைய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும் பொதுக்காலங்களில் வரும் ஞாயிறு தினங்களில் புனிதர்களின் விழாக்கள் கொண்டாடப்பட அனுமதி வழங்கப்படுகின்றது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Post a Comment