
பதவிக்காலம் நிறைவடைந்துள்ள மாகாண சபைகளின் எதிர்கால நடவடிக்கைகள் பற்றி ஆராயும் கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற போதே ஜனாதிபதி இவ்வாறு ஆலோசனை வழங்கினார்.
தற்போது பதவிக்காலம் நிறைவடைந்துள்ள வடமத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து இதன்போது ஜனாதிபதி கேட்டறிந்துகொண்டார்.
அத்துடன் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள செயற்பாடுகளை வேறு நிறுவனங்கள் கட்டுப்படுத்துவதற்கு இடமளிக்க வேண்டாமென்றும் அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மாகாண சபைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளைப் பயனுள்ள விதத்தில் செலவு செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
குறித்த மாகாணங்களின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதி உதவிகளின் கீழ் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி செயற்றிட்டங்கள் குறித்து விசேட அவதானத்துடன் செயற்படுமாறும் அச்செயற்றிட்டங்கள் வினைத்திறனான முறையில் முன்னோக்கிக் கொண்டு செல்லவும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியதுடன் அவ்வனைத்து நடவடிக்கைகளையும் மாகாண ஆளுநரின் ஆலோசனைகளுக்கேற்ப மேற்கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கினார்.
அமைச்சர் பைஸர் முஸ்தபா, மாகாண ஆளுநர்கள், ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.
Post a Comment