Ads (728x90)

பத­விக்­காலம் நிறை­வ­டைந்­துள்­ள­போதும் மாகாண சபை­க­ளி­னூ­டாக வழங்­கப்­படும் பொது­மக்­க­ளுக்­கான சேவை­க­ளையும் நாளாந்த நட­வ­டிக்­கை­க­ளையும் எவ்­வித பாதிப்பும் இன்றி தொடர்ச்­சி­யாக மேற்­கொள்­ளு­மாறு ஜனா­தி­பதி  மாகா­ணங்­களின் பிர­தம செய­லா­ளர்­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார்.

பத­விக்­காலம் நிறை­வ­டைந்­துள்ள மாகாண சபை­களின் எதிர்­கால நட­வ­டிக்­கைகள் பற்றி ஆராயும் கலந்­து­ரை­யாடல் ஜனா­தி­பதி   மைத்­திரி­பால சிறி­சேன   தலை­மையில் நேற்று ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இடம்­பெற்­ற­ போதே ஜனா­தி­பதி   இவ்­வாறு ஆலோ­சனை வழங்­கினார்.

தற்­போது பத­விக்­காலம் நிறை­வ­டைந்­துள்ள வட­மத்­திய, சப்­ர­க­முவ மற்றும் கிழக்கு மாகாண சபை­களின் செயற்­பா­டு­களில் ஏற்­பட்­டுள்ள பிரச்­சி­னைகள் குறித்து இதன்­போது ஜனா­தி­பதி   கேட்டறிந்­து­கொண்டார்.

அத்­துடன் மாகாண சபை­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள செயற்­பா­டு­களை வேறு நிறு­வ­னங்கள் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு இட­ம­ளிக்க வேண்­டா­மென்றும் அதி­கா­ரி­க­ளுக்கு சுட்­டிக்­காட்­டிய ஜனா­தி­பதி,    மாகாண சபை­க­ளுக்­காக ஒதுக்­கப்­பட்­டுள்ள நிதி ஒதுக்­கீ­டு­களைப் பய­னுள்ள விதத்தில் செல­வு­ செய்ய வேண்டும் என்றும் ஜனா­தி­பதி  ஆலோ­சனை வழங்­கினார்.

குறித்த மாகா­ணங்­களின் உள்­நாட்டு மற்றும் வெளி­நாட்டு நிதி உத­வி­களின் கீழ் மேற்­கொள்­ளப்­படும் அபி­வி­ருத்தி செயற்­றிட்­டங்கள் குறித்து விசேட அவ­தா­னத்­துடன் செயற்­ப­டு­மாறும் அச்­செ­யற்­றிட்­டங்கள் வினைத்­தி­ற­னான முறையில் முன்­னோக்கிக் கொண்டு செல்­லவும் ஜனா­தி­பதி   ஆலோ­சனை வழங்­கி­ய­துடன் அவ்­வ­னைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் மாகாண ஆளுநரின் ஆலோசனைகளுக்கேற்ப மேற்கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கினார்.

அமைச்சர் பைஸர் முஸ்தபா, மாகாண ஆளுநர்கள், ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ  உள்ளிட்டோர்  இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget