
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், "டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகத்தின் தென் பகுதியிலுல்ள 242 அறையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3.30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். 20 நிமிடங்களில் தீ கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
அறையில் இருந்த சில பொருட்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தினால் யாருக்கும் எந்த காயமும், உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று பிரதமர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment