Ads (728x90)



டைரக்டர் பிரியதர்ஷன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் அபிஷேக் பச்சன் நடிக்க உள்ளாராம். இப்படத்திற்கு தற்காலிகமாக பச்சன் சிங் என பெயரிடப்பட்டுள்ளது.

இப்படம் பற்றிய தகவலை உறுதி செய்த பிரியதர்ஷன் கூறுகையில், இந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இப்படத்தின் சூட்டிங்கை துவக்க உள்ளோம். இப்படத்தில் அபிஷேக் பச்சன் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்றார். பச்சன் சிங் படத்திற்கு ரம்மி ஜாப்பர் திரைக்கதை எழுத, பிரியதர்ஷன் இயக்குகிறார். இப்படத்தை ராஜத் ரவாலி தயாரிக்கிறார்.

இப்படத்தில் அபூர்வசக்தி கொண்ட , லஞ்சம் வாங்கும் போலீஸ் அதிகாரியாக அபிஷேக் பச்சன் நடிக்கிறாராம். படத்தின் படப்பிடிப்புக்களை துவக்குவதற்காக ஏற்பாடுகள் மம்முரமாக நடந்து வருகிறதாம்.

Post a Comment

Recent News

Recent Posts Widget