வித்தியா படுகொலை வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரும் மூன்று வெவ்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.வித்தியா படுகொலை வழக்கில் சிறப்பு தீர்ப்பாயத்தினால் கடந்த மாதம் 27ஆம் திகதி மரணதண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேர் உடனடியாக, கண்டி, பல்லேகல போகம்பரை சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டனர்.
தற்போது ஒரே சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த ஏழு குற்றவாளிக ளும், பாதுகாப்புக் காரணங்களுக்காக வெவ்வேறு சிறைச்சாலைகளுக்கு நேற்று முன்தினம் மாற்றப்பட்டனர்.
இவர்களில் இருவர் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கும், இருவர் மகர சிறைச்சாலைக்கும் மாற்றப்பட்டுள்ளனர். மூன்று பேர் தொடர்ந்தும், போகம்பரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஒரே குற்றத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் ஒரே இடத்தில் சிறை வைத்திருப்பதிலுள்ள பாதுகாப்பு பிரச்சினைகளைக் கருத் தில் கொண்டே இந்த மாற்றங்கள் இடம் பெற்றுள்ளன.
Post a Comment