Ads (728x90)

நாட்டின் பல பாகங்களில் காணப்படும் மழையுடன் கூடிய காலநிலை இன்றும் அடுத்த வரும் நாட்களிலும்  தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மத்திய சப்ரகமுவ, மேற்கு, வடமேற்கு, ஊவா, வடக்கு, வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி, மாத்தறை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் 150 மில்லிமீற்றரருக்கு அதிகமாக கனமழை பெய்யலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

சில பகுதிகளில் ஆங்காங்கே 100 மில்லிமீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சி எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் பதிவாகக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்று வீசும். இடி மின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget