Ads (728x90)

புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பாக ஐக்­கிய தேசியக் கட்­சியை பிர­தி­நி­தித்­துவம் செய்யும் அமைச்­சர்­க­ளுக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் இன்று காலை அல­ரி­மா­ளி­கையில் வைத்து விசேட நிபு­ணர்­க­ளினால் விளக்­க­ம­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது.

இது தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் விரி­வான விளக்கம் ஐக்­கிய தேசியக் கட்சி அமைச்­சர்­க­ளுக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் இல்­லா­த­மை­யை­ அ‍­டிப்­ப­டை­யாக கொண்டு இவ்­வா­றான வேலைத்­திட்­டத்தை ஐக்­கிய தேசியக் கட்சி ஏற்­பாடு செய்­துள்­ளது.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் ஆலோ­ச­னையின் பிர­காரம் புதிய அர­சி­ய­ல­மைப்பின் செயன்மு­றைகள், இடைக்­கால அறிக்கை, மக்­களின் கருத்­துக்கள் போன்ற பல்­வேறு விட­ய­தா­னங்கள் தொடர்­பாக ஐக்­கிய தேசியக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு விரி­வான விளக்கம் அளிக்­கப்­ப­ட­வுள்­ளது.

இந்த விளக்­க­ம­ளிப்பை அடிப்­ப­டை­யாக கொண்டு புதிய அர­சி­ய­ல­மைப்பு தொட ர்பில் நாட்டு மக்­க­ளுக்கு அறி­வு­றுத்­தவும் ஐக்­கிய தேசியக் கட்சி தயா­ராகி வரு­கின்­றது.

இந்த கருத்­த­ரங்கு இன்று காலை 11 மணிக்கு அலரி மாளிகையில் நடத்தப்பட வுள்ளது. இந்த கருத்தரங்கில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Post a Comment

Recent News

Recent Posts Widget