Ads (728x90)

அனைத்து பாட­சாலை மாண­வர்­க­ளுக்கும் இல­வ­ச­மாக வழங்­கப்­பட்ட காப்­பு­றுதி திட்­டத்தை அனைத்து மதங்­களைச் சார்ந்த அற­நெறிப் பாட­சாலை மாண­வர்­க­ளுக்கும் வழங்க அர­சாங்கம் உத்­தே­சித்­துள்­ள­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

கல்வி மற்றும் சுகா­தாரத் துறையின் அபி­வி­ருத்­தியின் மூல­மாக நல்­லாட்சி அர­சாங்கம் செயற்­படும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

அனைத்து பாட­சாலை மாண­வர்­க­ளுக்கும் சுரக் ஷா  இல­வச காப்­பு­றுதி வழங்கும் தேசிய நிகழ்வு நேற்று அலரி மாளி­கையில் நடை­பெற்­றது. இந்­நி­கழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே ஜனா­தி­பதி மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மேலும் உரை­யாற்­று­கையில்,

தேசிய அர­சாங்கம் என்ற வகையில் நாம் நாட்­டுக்கு வழங்­கிய பிர­தான வாக்­கு­று­தி­களில் ஒன்றை நிறை­வேற்­றி­யுள்ளோம். அனைத்து அர­சாங்­கமும் நாட்டின் கல்வித் துறையின் வளர்ச்­சிக்கு பெரும் முக்­கி­யத்­துவம் அளித்­துள்­ளன.

இதன்­ப­டியே தேசிய அர­சாங்கம் என்ற வகையில் நாம் அதற்­காக முக்­கி­யத்­துவம் செலுத்தி வரு­கின்றோம். இதன்­ பி­ர­கா­ரமே காப்­பு­றுதி திட்­டத்தின் பிர­காரம் அனைத்து பாட­சாலை மாண­வர்­க­ளுக்கும் காப்­பு­றுதி வழங்­கி­யுள்ளோம். எனினும் குறித்த இல­வச காப்­பு­று­தியை அனைத்து மத அற­நெறிப் பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு வழங்­கவும் அர­சாங்கம் உத்­தே­சித்­துள்­ளது.

அர­சாங்கம் என்ற வகையில் கல்வி துறையில் ஒரே கொள்­கை­யையே கடைப்­பி­டிக்­கின்றோம். இந்­நி­லையில் நாம் கல்வி துறையில் பாரிய மாற்­றங்­களை செய்ய வேண்­டி­யுள்­ளது.

இல­வ­ச­மாக காப்­பு­றுதி வழங்­கி­ய­மையின் ஊடாக நாம் விழுந்­தாலும் பிரச்­சி­னை­யில்லை. நினைத்த மாதிரி ஓடி திரி­யலாம் என தற்­போது மாண­வர்கள் நினைக்கக் கூடும். அப்­ப­டி­யல்ல ஏதா­வது விபத்­துகள் ஏற்­பட்டால் மாத்­தி­ரமே இவ்­வா­றான சலு­கைகள் வழங்­கப்­படும். விபத்­து­களில் இருந்து மாண­வர்­க­ளினால் மாண­வர்­க­ளுக்கு ஏற்­ப­டுத்தும் ஆபத்தை குறைப்­பதே எமது நோக்­க­மாகும்.

எனவே கல்வி மற்றும் சுகா­தாரத் துறை சார்ந்த அபி­வி­ருத்­திக்கு  நல்­லாட்சி அர­சாங் கம் என்ற வகையில் நாம் முக்­கி­யத்­துவம் வழங்­குவோம்.

அத்­துடன் இந்த காப்புறுதி வழங்குவது குறித்தான பாரிய பொறுப்பு  ஆசிரியர் களிடமே உள்ளது. எனவே ஆசிரியர்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். எவ்வாறாயினும் ஆசிரியர்களின் கடமை உணர்வு என்றும் போற்றப்பட வேண்டும் என்றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget