
தாய்வான் நாட்டின் ஃபா ஈஸ்டன் வங்கியில் இருந்து அனுப்பப்பட்ட 1.1 மில்லியன் டொலர் பணம் இலங்கை வங்கியின் தனியார் கணக்கொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பான விசாரணைக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
அவர் ஆரம்ப விசாரணைகளின் பின்னர் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்று கூறப்பட்டது.
ஃபா ஈஸ்டன் இன்டர்நெஷனல் வங்கியின் கணினி கட்டமைப்புக்குள் ஊடுருவி 60 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் மேற்பட்ட பணம், இலங்கை உள்ளிட்ட சில நாடுகளின் வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்பட்டமை தொடர்பில் தாய்வானின் குற்றப் புலனாய்வுப் பணியகம் அண்மையில் விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.
குறித்த வங்கியிலிருந்து இலங்கை வங்கியின் தனியார் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்ட பணத்தை மீளப் பெறுவதற்கு முயன்ற கணக்கு உரிமையாளர் ஜே.சி.நம்முனி என்பவர் கடந்த வௌ்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் என்று புலனாய்வுப் பிரிவினரால் மேலும் தெரிவிக்கப்பட்டது.
Post a Comment