Ads (728x90)

லிட்றோ காஸ் நிறு­வன தலை­வர் ஷலீல முன­சிங்க குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­ன­ரால் நேற்­றுக் கைது செய்­யப்­பட்­டார் என்று தெரி­விக்­கப்­பட்­டது.
தாய்­வான் நாட்­டின் ஃபா ஈஸ்­டன் வங்­கி­யில் இருந்து அனுப்­பப்­பட்ட 1.1 மில்­லி­யன் டொலர் பணம் இலங்கை வங்­கி­யின் தனி­யார் கணக்­கொன்­றில் இருந்து கண்­டு­பி­டிக்­கப்­பட்­டமை தொடர்­பான விசா­ர­ணைக்­காக அவர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார் என்று தெரி­விக்­கப்பட்­டது.

அவர் ஆரம்ப விசா­ர­ணை­க­ளின் பின்­னர் இன்று நீதி­மன்­றில் முற்­ப­டுத்­தப்­ப­டு­வார் என்று கூறப்­பட்­டது.

ஃபா ஈஸ்­டன் இன்­டர்­நெ­ஷ­னல் வங்­கி­யின் கணினி கட்­ட­மைப்­புக்­குள் ஊடு­ருவி 60 பில்­லி­யன் அமெ­ரிக்க டொல­ருக்­கும் மேற்­பட்ட பணம், இலங்கை உள்­ளிட்ட சில நாடு­க­ளின் வங்கி கணக்­கு­க­ளில் வைப்­பி­லி­டப்­பட்­டமை தொடர்­பில் தாய்­வா­னின் குற்­றப் புல­னாய்­வுப் பணி­ய­கம் அண்­மை­யில் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தி­ருந்­தது.

குறித்த வங்­கி­யி­லி­ருந்து இலங்கை வங்­கி­யின் தனி­யார் வங்­கிக் கணக்­கில் வைப்­பி­லி­டப்­பட்ட பணத்தை மீளப் பெறு­வ­தற்கு முயன்ற கணக்கு உரி­மை­யா­ளர் ஜே.சி.நம்­முனி என்­ப­வர் கடந்த வௌ்ளிக்­கி­ழமை கைது செய்­யப்­பட்­டுள்­ளார் என்று புல­னாய்­வுப் பிரி­வி­ன­ரால் மேலும் தெரி­விக்­கப்­பட்­டது.

Post a Comment

Recent News

Recent Posts Widget