
இவ்வாறு தெரிவித்தனர் நியமனம் கோரிப் போராட்டங்களில் ஈடுபட்டுவரும் சுகாதாரத் தொண்டர்கள். வவுனியாவில் நேற்று அவர்கள் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தனர்.
அவர்கள் தெரிவித்ததாவது-:
எமக்கு நிரந்தர நியமனம் வழங்கவேண்டும் என்று கோரிப் பல மாதங்களாகப் போராட்டங்களை மேற்கொண்டோம். பல தடவைகள் எமது பிரதேச அரசியல்வாதிகளுடன் தொடர்பு கொண்டோம்.
வடக்கு மாகாண ஆளுநர் அலுலகத்துக்குச சென்றிருந்தோம்.கொழும்பு சென்று கலந்துரையாடினோம். வடக்கில் உள்ள சுகாதாரத் தொண்டர்களின் விவரங்களை ஆளுநரிடம் ஒப்படைக்குமாறு கூறப்பட்டது.அவை வழங்கப்பட்டும் இதுவரை எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைளும் எடுக்கப்படவில்லை.
118 நாள்கள் கவனவீர்ப்புப் போராட்டம் நடத்தினோம். வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் எங்களிடம் கலந்துரையாடியமைக்கு அமைவாகவும், எமது குடும்ப நிலைமைகள் காரணமாகவும் எமது போராட்டத்தை இடைநிறுத்தினோம்.
இருந்தும் கடந்த 45 நாள்களாக அவரவர் மாவட்டங்களில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்ததுடன், வடக்கு முதலமைச்சரையும் சந்தித்தோம். வடக்கு ஆளுநரையும் சந்தித்துப் பேசினோம். தற்போது மத்திய அரசால் டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்கள் என்ற ஒரு போர்வையில் வடக்கு மாகாணத்தில் 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடாகவும் நாடாளுமன்றத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டு 50 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் திட்டத்தில் எங்களை ஏன் உள்வாங்கவில்லை என்பதே எமது கேள்வி. இதற்கு எதிர்ப்புப் தெரிவித்து நாளை புதன்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக வடக்கு சுகாதாரத் தொண்டர்கள் ஒன்றிணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம். அதற்கும் எங்களுக்கு சரியான பதில் கிடைக்காவிடால் எமது போராட்டத்தை வேறுமாதியான முறையில் மேற்கொள்வதற்கு நாங்கள் ஒன்றினைந்து தீர்மானம் எடுத்துள்ளோம் – என்றனர்.
Post a Comment