
குஜராத் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல், காம்லா நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியதாவது: குஜராத்தைச் சேர்ந்தவர்கள், வியாபாரத்தில் மிகச் சிறந்தவர்கள் என்கின்றனர். ஆனால், பா.ஜ., தலைவர், அமித் ஷாவின் மகன், ஜெய் அமித் ஷாவின் நிறுவனத்தின் மதிப்பு, ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.80 கோடியாக உயர்ந்துள்ளது. 2014ல் அடையாளமே இல்லாமல் இருந்த ஒரு நிறுவனம், 16 ஆயிரம் மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. இதைப்போல, வேறு யாரும் செய்ய முடியவில்லையே...
'நானும் ஊழல் செய்ய மாட்டேன்; மற்றவர்களையும் செய்ய விட மாட்டேன்' எனக்கூறிய, பிரதமர் மோடி மவுனமாக இருப்பது ஏன்? காங்., ஆட்சிக்கு வந்தவுடன், சிறிய, நடுத்தர தொழில்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்
Post a Comment