
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் மணீஷ் கிரி,25 விசாகப்பட்டினம் ஐ.என்.எஸ். இக்ஸிலா கப்பல் படை தளத்தில் கடந்த 2010-ம் ஆண்டு மாலுமியாக பணியில் சேர்ந்தார்.
இந்நிலையில் கடந்த வருடம் விடுமுறையில் சென்ற மணீஷ் கிரி, மீண்டும் பணியில் சேர்ந்த போது அவரது நடவடிக்கையில் மாற்றம் தெரிய துவங்கியது. பணி நேரம் போக மற்ற நேரத்தில் சேலை அணிவது, பெண்கள் அணியும் மாடல் உடை அணியத் துவங்கினார்.
மணீஷ்கிரியின் செயலில் சந்தேகம் ஏற்படவே விசாரித்ததில் விடுமுறையில் சென்ற போது மும்பையில் மருத்துமனையில் ஒன்றில் பெண்ணாக மாறியதற்கான அறுவை சிகிச்சை செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து கப்பற்படை விதிமுறைகளை மீறியதாக அவரை கிழக்கு கடற்படை கமாண்டர் உத்தரவின் பேரில் உடனடியாக அவரை பணி நீக்கம் செய்யபட்டார்.
பெண்ணாக மாறிய மணீஷ் குமார் கிரி கூறுகையில், விருப்பபட்டு தான் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். பெண்ணாக மாறியது தவறா, அப்படி என்ன நான் குற்றம் செய்தேன். நான் திருடான? பயங்கரவாதி? 7 வருடங்களாக நாட்டுக்காக பாடுபட்டேன். என்னை பணி நீக்கியதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்வேன்.எனக்கு நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன் என்றார்.
Post a Comment