Ads (728x90)

புங்­கு­டு­தீவு பாட­சாலை மாண­வி­யான சிவ­லோ­க­நாதன் வித்­தியா படு­கொலை வழக்கில் தண்­டனை விதிக்­கப்­பட்ட குற்­ற­வா­ளிகள் சார்பில் அவர்கள் தரப்பு சட்­டத்­த­ர­ணிகள் மற்றும் சிறைச்­சாலை அத்­தி­யட்­சகர் ஊடாக இவ்­வ­ழக்­கிற்கு வழங்­கப்­பட்ட தீர்ப்­புக்கு எதி­ராக மேன்­மு­றை­யீடு செய்­யப்­பட்­டுள்­ளது.

குறித்­தமேன் முறை­யீட்டு மனுக்­க­ளா­னது யாழ்.மேல்­நீ­தி­மன்ற பதி­வா­ள­ருக்கு குறித்த இரு­த­ரப்­பி­ன­ராலும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த மாதம் 28 ஆம் திகதி வித்­தியா படு­கொலை வழக்கில் ட்ரயல் அட்பார் நீதி­மன்றம் ஒன்­பது சந்­தே­க­ந­பர்­களில் ஏழு பேரை குற்­ற­வா­ளி­க­ளாக கண்­ட­துடன் அந்த ஏழு பேருக்கும் மர­ண­தண்­ட­னையும் முப்­ப­தாண்டு கால கடூ­ழி­ய­சிறைத் தண்­ட­னையும் விதித்து தீர்ப்­ப­ளித்­தி­ருந்­தது. இவ்­வா­றான நிலை­யி­லேயே தீர்ப்­புக்கு எதி­ராக மேன்­மு­றை­யீ­டா­னது செய்­யப்­பட்­டுள்­ளது.

ஒரு வழக்கில் குற்­ற­வா­ளி­யாக இனங்­கா­ணப்­பட்டு தீர்­ப்ப­ளிக்­கப்­பட்­ட ­கைதி தனது தீர்­ப்புக்கு எதி­ராக இரண்டு வழி­களில் மேன்­மு­றை­யீடு செய்­வ­தற்கு உரித்­து­டை­ய­வ­ராவர். அதா­வது அவர் தனது சார்பு சட்­டத்­த­ரணி ஊடாக மேன்­மு­றை­யீடு செய்­ய­மு­டியும்.

அதே­போன்று தீர்ப்­ப­ளிக்­கப்­பட்ட பின் னர் அவர் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள சிறைச்­சாலை அத்­தி­யட்­சகர் ஊடா­கவும் மேன்­மு­றை­யீடு செய்­ய­ முடியும்.

இந்த அடிப்­ப­டை­யி­லேயே இவ்­வ­ழக்கில் ஏழு குற்­ற­வா­ளிகள் சார்­பா­கவும் அவர்கள் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள சிறைச்­சா­லை­யான போகம்­பரை சிறைச்­சா­லையின் அத்­தி­யட்­சகர் இவர்­க­ளுக்­கான தீர்ப்­புக்கு எதி­ராக மேன்­மு­றை­யீடு செய்து அதற்­கான மனு­வினை யாழ்.மேல்­நீ­தி­மன்ற பதி­வா­ள­ருக்கு அனுப்பி வைத்­துள்ளார்.

இதே­போன்று குற்றம் நிரூ­பிக்­கப்­பட்ட இவ்­வ­ழக்கின் முக்­கிய சூத்­தி­ர­தா­ரி­யாக கூறப்­பட்ட சுவிஸ்­குமார் எனப்­படும் மகா­லிங்கம் சசிக்­குமார் மற்றும் அவ­ர­துச கோதரன் மகா­லிங்கம் சசீந்­திரன் ஆகியோர் சார்பில் சட்­டத்­த­ரணி ஆர்.ரகு­பதி மேன்­மு­றை­யீட்டு மனு­வினை கடந்த ஒன்­பதாம் திகதி மேற்­கொண்­டி­ருந்தார். அத்­துடன் ஏனைய குற்­ற­வா­ளி­க­ளான பூபா­ல­சிங்கம் ஜெயக்­குமார், பூபா­ல­சிங்கம் தவக்­குமார், தில்­லை­நாதன் சந்­தி­ர­காசன், சிவ­தேவன் துஷாந்தன் மற்றும் ஜெய­த­ரன் ­கோ­கிலன், ஆகியோர் சார்பில் சட்­டத்­த­ரணி மகிந்த ஜய­வர்த்­தன நேற்­றை­ய­தினம் மேன்­மு­றை­யீட்டு மனு­வினை சமர்­ப்பித்­தி­ருந்தார்.

இவ்­வாறு சமர்­பிக்­கப்­பட்ட மேன்­மு­றை­யீட்டு மனுத்­தொ­டர்­பாக இவ் வழக்கின் தீர்ப்­ப­ளித்த ட்ரயல் அட்பார் நீதி­மன்ற நீதி­ப­தி­க­ளுக்கு அறி­வித்த பின்னர் இவ்­வ­ழக்கின் நீதிவான் நீதி­மன்ற மூல வழக்­கே­டுகள் மற்றும் ட்ரயல் அட்பார் நீதி­மன்ற வழக்கு விசா­ரணை வழக்கு ஏடுகள் அடங்­கிய அனைத்து ஆவ­ணங்­களும் உயர்­நீ­தி­மன்­றத்­திற்கு அனுப்பி வைக்­கப்­ப­ட­வுள்­ளன.

இவ்­வ­ழக்­கா­னது ட்ரயல் அட்பார் முறை யில் மூன்று நீதிபதிகள் முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டதனால் இவ்வழக் கின் மேன்முறையீட்டு விசாரணையானது உயர்நீதிமன்றத்திலேயே மேற்கொள்ள முடி யும் என்ற சட்ட ஏற்பாடுகளுக்கு அமை யவே இவ்வழக்கின் மேன்முறையீட்டு கோவைகள் அனைத்தும் உயர்நீதிமன்று க்கு அனுப்பிவைக்கப்படவுள்ளமையும் குறிப் பிடத்தக்கதாகும்.

Post a Comment

Recent News

Recent Posts Widget