Ads (728x90)

கடந்த காலங்­க­ளில் இடம்­பெற்ற ஊழல், மோச­டி­கள் தொடர்­பில் விசா­ரணை நடத்­து­வ­தற்­காகச் சிறப்புத் தீர்ப்­பா­யம் (ட்ரயல் அட் பார்) ஒன்றை அமைப்­ப­தற்கு அமைச்­ச­ரவை நேற்று அனு­மதி வழங்­கி­யது.

வாராந்த அமைச்­ச­ர­வைக் கூட்­டம் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யில் நேற்று முற்­ப­கல் நடை­பெற்­றது. அதில் நீதி அமைச்­சர் தலதா அத்­து­கோரள நீதி­யா­யத்­துக்­கான யோச­னையை முன்­வைத்­தார். அமைச்­ச­ர­வை­யில் அது ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டது.

கடந்த ஆட்­சிக்­கா­லத்­தில் இடம்­பெற்ற பெரும் ஊழல், மோச­டி­கள் தொடர்­பான விசா­ர­ணை­கள் விரை­வாக இடம்­பெ­ற­வில்லை என்ற குற்­றச்­சாட்டு தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

முன்­னைய ஆட்­சி­யின் ஊழல் பேர்­வ­ழி­க­ளைப் பாது­காக்­கவே இந்த அர­சும் முயற்­சிக்­கி­றது என்று ஜேவிபி தொடர்ந்து குற்­றஞ்­சாட்டி வரு­கி­றது. இதனை அடுத்து தனி­யான தீப்­பா­யம் அமைத்து அதற்­கூ­டாக விசா­ர­ணை­க­ளைத் துரித்ப்­ப­டுத்­தும் யோசனை பற்றி ஆரா­யப்­பட்­டது.

அது தொடர்­பான திட்­டத்­தையே நீதி அமைச்­சர் அமைச்­ச­ர­வை­யி­டம் முன்­மொ­ழிந்து அனு­ம­தி­யைப் பெற்­றுள்­ளார்.

தலைமை நீதி­ய­ர­சர் மற்­றும் சட்­டமா அதி­பர் ஆகி­யோர் விருப்­பம் தெரி­வித்­தால் ஏனைய நீதி­மன்­றங்­க­ளி­லுள்ள வழக்­கு­க­ளை­யும் சிறப்பு மேல் நீதி­மன்­றத்­துக்கு மாற்­றும் வகை­யி­லான யோசனை அமைச்­ச­ரவை பத்­தி­ரத்­தில் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget