Ads (728x90)


உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்டு இலங்கை வந்­துள்ள அவுஸ்­தி­ரே­லிய பிர­தமர் மெல்கம் டர்ன்புல் ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோரை சந்­தித்­து பேசியுள்ளார்.
சட்­ட­வி­ரோத ஆட்­க­டத்தல் நட­வ­டிக்­கை­களை தடுப்­பதும்,
பொரு­ளா­தார வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுப்­பது குறித்தும் இந்த சந்­திப்புக்களில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது. 

அவுஸ்­தி­ரே­லிய விமா­னப்­ப­டையின் விசேட விமானம் ஒன்றில் பயணம் மேற்­கொண்டு நேற்று காலை 7.10 மணி­ய­ளவில் கட்­டு­நா­யக்கா விமா­ன­நி­லை­யத்தை வந்­த­டைந்த அவுஸ்­தி­ரே­லிய பிர­தமர் மெல்கம் டர்ன்­புல்லை அமைச்சர் சாகல ரத்­நா­யக வர­வேற்­றி­ருந்தார். 
 
இந்­நி­லையில் நேற்று காலை 7.30 மணிக்கு அல­ரி­மா­ளி­கையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் அவுஸ்­தி­ரே­லிய பிர­தமர் மெல்கம் டர்ன்புல் ஆகி­யோ­ருக்கு இடை­யி­லான சந்­துப்பு இடம்­பெற்­றது. அதன் பின்னர் காலை 8.30 மணிக்கு ஜனா­தி­பதி செய­ல­கத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கும் அவுஸ்­தி­ரே­லிய பிர­தமர் மெல்கம் டர்ன்புல் ஆகி­யோ­ருக்கும் இடையில் சந்­திப்பு இடம்­பெற்­றது.



இந்த சந்­திப்­பு­களின் போது இலங்கை மற்றும் அவுஸ்­தி­ரே­லிய நாடு­க­ளுக்கு இடை­யி­லான இரு­த­ரப்பு நட்­பு­றவு செயற்­பா­டு­களை மேலும் பலப்­ப­டுத்­து­வது குறித்தும் இரு நாடு­க­ளுக்கு இடை­யி­லான பொரு­ளா­தார நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பது குறித்தும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது.

குறிப்­பாக அவுஸ்­தி­ரே­லிய அரச முத­லீட்­டா­ளர்கள் மூல­மாக இலங்­கையில் முன்­னெ­டுக்கும் பொரு­ளா­தார நகர்­வு­களை மேலும் பலப்­ப­டுத்­து­வது குறித்து இரு நாட்டு பிர­த­மர்கள் இடையில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது.

மேலும் சட்­ட­வி­ரோத ஆட்­க­டத்தல் நகர்­வுகள் இலங்கை கடல் எல்­லையில் அதி­க­ரித்­துள்ள நிலையில் சட்­ட­வி­ரோத ஆட்­க­டத்­தலை தடுக்கும் நட­வ­டிக்­களை மேலும் பலப்­ப­டுத்த இரு நாடு­களும் இணைந்து முன்­னெ­டுக்கும் நட­வ­டிக்­கைகள் குறித்தும் இலங்கை அரச தலை­வர்கள் இடை­யி­லான பேச்­சு­வார்த்­தை­களில் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இரு நாடு­களின் கடற்­படை மூல­மாக இவ்­வா­றான இணை நகர்­வு­களை முன்­னெ­டுக்கும் வேலைத்­திட்­டங்­களை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றைய பேச்சுவார்த்தைகளின் பின்னர் நேற்று பிற்பகல் அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல் மீண்டும் அவுஸ்திரேலிய விமானப்படையின் சிறப்பு விமானத்தில் அவுஸ்திரேலியா நோக்கிய பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget