
மிகுதி 75 பேரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர் என்று வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொசான் பெர்னான்டோ தெரிவித்தார்.
சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 7 மோட் டார் சைக்கிள்கள் பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணை இடம்பெறுகிறது. இந்த நடவடிக்கை தொடரும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாள்வெட்டுக் குழுக்களின் அடாவடி அதிகரித்துள்ள நிலையில் இந்தப் பொலிஸ் குழு அமைக்கப்பட்டது.
தினமும் மாலை நேரங்களிலிருந்து நள்ளிரவுவரை இந்தச் சுற்றி வளைப்பும் தேடுதலும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment