Ads (728x90)

வாள்­வெட்­டுக் குழுக்­க­ளின் அட்­ட­கா­சத்தை அடக்­கும் முயற்­சி­யாக கடந்த சில நாள்­க­ளில் மட்­டும் பொலி­ஸா­ரால் 81 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர். அவர்­க­ளில் 6 பேர் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­ட­னர்.

மிகுதி 75 பேரும் பொலிஸ் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­ட­னர் என்று வடக்கு மாகாண மூத்த பிர­திப் பொலிஸ்மா அதி­பர் றொசான் பெர்னான்டோ தெரி­வித்­தார்.

சந்­தே­கத்­தில் கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளி­ட­மி­ருந்து கைப்­பற்­றப்­பட்ட 7 மோட் டார் சைக்­கிள்­கள் பொலிஸ் நிலை­யங்­க­ளில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளன. மேல­திக விசா­ரணை இடம்­பெ­று­கி­றது. இந்த நட­வ­டிக்கை தொட­ரும் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

யாழ்ப்­பா­ணக் குடா­நாட்­டில் வாள்­வெட்­டுக் குழுக்­க­ளின் அடா­வடி அதி­க­ரித்­துள்ள நிலை­யில் இந்­தப் பொலிஸ் குழு அமைக்­கப்­பட்­டது.
தின­மும் மாலை நேரங்­க­ளி­லி­ருந்து நள்­ளி­ர­வு­வரை இந்­தச் சுற்றி வளைப்­பும் தேடு­த­லும் இடம்­பெ­று­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget