Ads (728x90)

புகை­யி­ர­தங்­களில் பொதிகள் போக்­கு ­வ­ரத்­துக்­கான கட்­ட­ணத்தை 100க்கு 50 வீத­ மாக உயர்த்­து­வ­தற்கு புகை­யி­ரத திணைக்­களம் தீர்­மா­னித்­துள்­ளது. இந்த புதிய கட்­டண அற­வீடு இன்று முதல் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தாக புகை­யி­ரத திணைக்­க­ளத்தின் சந்­தைப்­ப­டுத்தல் மற்றும்  விநி­யோக முகா­மை­யாளர் என்.ஜே. இந்­தி­பொ­லகே தெரி­வித்­துள்ளார்.

பொதிகள் போக்­கு­வ­ரத்­துக்­கான கட்­டண அதி­க­ரிப்­புக்­கான அமைச்­ச­ரவை அங்­கீ­கா ரம் கிடைத்­துள்­ள­தா­கவும் அவர்  மேலும் தெரி­வித்­துள்ளார். பொதிகள் போக்­கு­வ­ரத்­துக்­கான கட்­டணம் 2008 ஆம் ஆண்டு முதல் அதி­க­ரிக்­கப்­ப­டா­த­ போதும், ஒன்­பது வரு­டங்­களின் பின்­னரே இவ்­வாறு கட்­டணம் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் புகை­யி­ரத திணைக்­களம் குறிப்­பி­டு­கின்­றது.

எவ்­வா­றா­யினும், வணிக ரீதி­யி­லான பொதிகள் போக்குவரத்துக்கு மாத்திரமே இந்த கட்டண அதிகரிப்பு உள்ளடங்குவ தாக என என்.ஜே. இந்திபொலகே தெரி வித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget