Ads (728x90)

இடைக்­கால அறிக்­கை­யில் தமிழ் மக்­க­ளுக்கு எது­வும் இல்லை என்று கூறும் முத­ல­மைச்­ச­ராக இருந்­தா­லும் சரி, அமைச்­சர்­க­ளாக இருந்­தா­லும் சரி அல்­லது தேசி­யக் கொடியை ஏற்ற முடி­யாது என்று போலித் தேசி­யம் பேசு­ப­வர்­க­ளாக இருந்­தா­லும் சரி அவர்­க­ளு­டன் நான் விவா­திக்­கத் தயாராக இருக்­கின்­றேன்.
விவா­திக்க வரு­ப­வர்­கள் இடைக்­கால அறிக்­கையை முழு­மை­யா­கப் படித்­து­விட்டு வர­வேண்­டும். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், அந்­தக் கட்­சி­யின் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்தார்

மட்­டக்­க­ளப்பு மாவட்ட முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் அஸ்லி நிம­லன் சௌத்­த­ர­நா­ய­கத்­தின் 17ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்­றது. இந்த நிகழ்­வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

கூட்­டாட்­சியை (சமஷ்டி) முத­லில் அறி­மு­கப்­ப­டுத்­தி­ய­வர்­கள் சிங்­க­ள­வர்­கள். இதை முத­லில் பிரிட்­டி­ஷா­ரி­டம் பரிந்­துரை செய்­த­வர்­கள் கண்­டி­யச் சிங்­க­ள­வர்­கள். அத­னால் கூட்­ட◌ாட்­சி­யைச் சிங்­கள மக்­க­ளுக்கு எதி­ரா­னது என்று எவ­ரும் கூற­மு­டி­யாது. இந்த விட­யங்­களை அவர்­கள் பயப்­ப­டா­மல் இருக்­கும் வகை­யில் கூற­வேண்­டும்.

ஒரு நாட்­டின் அர­ச­மைப்பு மக்­கள் பார்த்­துப் பயப்­ப­டும் ஒன்­றாக இருக்­கக் கூடாது. சொற்­க­ளைக் கண்டு பயந்­தால் அந்­தச் செற்­க­ளைத் தள்ளி வைத்­து­விட்டு உள்­ள­டக்­கங்­க­ளைப் பார்க்­க­வேண்­டும்.

70 ஆண்­டு­க­ளாக எமது மக்­க­ளின் வேண­வாக்­க­ளாக இருந்த, எங்­களை எமது மாநி­லத்­தில் ஆட்சி செய்­கின்ற அதி­கா­ரம் இருக்­கி­றதா இல்­லையா? என்று பார்க்க வேண்­டும். சொற்­களை வைத்து போலித் தேசிய வாதம் பேசா­தீர்­கள்.
அனைத்து நாடா­ளு­மன்­றச் சட்­டங்­க­ளும் மாகா­ண­சபை நிய­திச் சட்­டங்­க­ளும் துணை­நிலை சட்­ட­வாக்­கங்­க­ளும் சிங்­க­ளத்­தி­லும் தமி­ழி­லும் ஆங்­கி­லத்­தி­லும் இயற்­றப்­ப­டு­தல் வேண்­டும் என்று உப­குழு அறிக்­கை­யிலே தெளி­வா­கக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

புதிய அர­ச­மைப்­பிலே சிங்­க­ளம் மேலோங்­கும் என்று எங்­கும் சொல்­லப்­ப­ட­வில்லை. மூன்று மொழி­க­ளுக்­கும் சம அங்­கீ­கா­ரம் கொடுக்­கப்­பட்­டுள்­ளது.
மக்­க­ளின் அடிப்­படை விட­யங்­கள் இடைக்­கால அறிக்­கை­யில் மறுக்­கப்­பட்­டுள்­ளது என்று எவ­ரா­லும் கூற முடி­யாது. நாங்­கள் தற்­போது அரை­வா­சித் தூரம்­தான் வந்­துள்­ளோம். இது சரி­வ­ரும்; சரி­வ­ரா­ம­லும் போய்­வி­ட­லாம்.
சரி­வ­ரா­மல் போய்­வி­டுமோ என்ற பயத்­தி­னாலே இப்­போதே வெளி­வா­ருங்­கள் என்று கூறும் மூடன் யார்? மூடத்­த­ன­மாக மக்­க­ளைத் தேவை­யில்­லாது உசுப்­பேத்தி அவர்­க­ளுக்­குள்ளே வீணா­கப் பீதியை உரு­வாக்கி இது­வரை நாங்­கள் இழந்த இழப்­பு­க­ளுக்கு மாற்­றீ­டாக ஓர் அர­சி­யல் தீர்வு கிடைக்­கும் வாய்ப்பை நாங்­களே மழுங்­க­டித்து எங்­கள் தலை­யில் நாங்­களே மண்­ணைப் போட வேண்­டும் என்று சொல்­லு­கின்­ற­வர்­களை மக்­கள் நிரா­க­ரிக்க வேண்­டும் – என்­றார்.

முறக்­கொட்­டான்­சேனை தேவ­பு­ரம் இலங்கை கிறிஸ்­தவ சமூக மண்­ட­பத்­தில் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சிக் கிளை­யின் கோற­ளைப்­பற்று மற்­றும் கோற­ளைப்­பற்று தெற்­குப் பிர­தேச கிளை­க­ளின் ஏற்­பாட்­டில், இந்த நிகழ்வு நடை­பெற்­றது.

நிம­லன் சௌந்­த­ர­நா­ய­கம் உயி­ரி­ழந்து 17 வரு­டங்­கள் ஆகின்­றது. இது­வரை கால­மும் அவ­ரது நினைவு தினம் கடைப்­பி­டிக்­கப்­ப­ட­வில்லை. இந்த ஆண்டே கடைப்­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

தேர்­தல் நடை­பெ­ற­வுள்­ள­மை­யி­னா­லேயே இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி இதனை முன்­னெ­டுத்­துள்­ள­தாக, நிகழ்­வில் கலந்­து­கொண்ட இளை­ஞர்­கள் சிலர் குழப்­பம் விளை­வித்­தி­ருந்­த­னர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget