Ads (728x90)

இலங்­கைப் போக்­கு­வ­ரத்­துச் சபை­யின் வட­பி­ராந்­திய ஊழி­யர்­க­ளின் கோரிக்­கை­களை நிறை­வேற்றி அரச பேருந்து சேவையை இயல்பு நிலைக்­குக் கொண்­டு­வர நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டா­விட்­டால் ஊழி­யர்­க­ளுக்கு ஆத­ரவு தெரி­வித்து வடக்­கில் உள்ள பாட­சாலை அதி­பர்­கள், ஆசி­ரி­யர்­க­ளும் பணிப் புறக்­க­ணிப்­புப் போராட்­டத்­தில் ஈடு­ப­ட­வேண்டி வரும் என்று இலங்­கைத் தமி­ழர் ஆசி­ரி­யர் சங்­கம் எச்­ச­ரித்­துள்­ளது.

இது தொடர்­பில் சங்­கம் அனுப்பி வைத்­துள்ள பத்­தி­ரி­கைச் செய்­திக் குறிப்­பில் கூறப்­பட்­டுள்­ள­தா­வது

மாண­வர்­க­ளின் மூன்­றாம் தவ­ணைப் பரீட்சை நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கும் காலத்­தில் ஊழி­யர்­க­ளின் போராட்­டம் மாண­வர்­க­ளின் கல்­வி­யில் பின்­ன­டைவை ஏற்­ப­டுத்­தும். ஊழி­யர்­க­ளின் நியா­ய­மான கோரிக்­கை­களை ஏற்று போக்­கு­வ­ரத்­துச் சேவையை உடன் ஆரம்­பிக்க வழி­யேற்­ப­டுத்த வேண்­டும்.
ஊழி­யர்­க­ளின் போராட்­டம் தொட­ரு­மாக இருந்­தால் அதி­பர்­கள், ஆசி­ரி­யர்­க­ளும் அவர்­க­ளுக்­குத் துணை­யாக போராட்­டத்­தில் ஈடு­ப­ட­வுள்­ள­தோடு, பாட­சா­லை­கள் அனைத்­தும் முடங்­கும் நிலை உரு­வா­கும்.

வட­மா­கா­ணத்­தில் அநே­க­மான மாண­வர்­கள் பரு­வ­கா­லச் சீட்­டு­க­ளு­டன் இலங்­கைப் போக்­கு­வ­ரத்­துச் சபை பேருந்­து­க­ளில் பய­ணம் செய்­வ­தோடு, தூர இடங்­க­ளில் பணி­யாற்­றும் அதி­பர்­கள், ஆசி­ரி­யர்­கள் பலர் இத்­த­கைய பேருந்­துச் சேவை­யைப் பெரி­தும் பயன்­ப­டுத்­து­கின்­ற­னர்.

பேருந்­துச் சேவை தடைப்­ப­டு­வ­தால் கட­மைக்­குச் செல்­வது முடி­யாத காரி­ய­மாக உள்­ளது. ஆகை­யால் சம்­பந்­தப்­பட்ட உயர் அதி­கா­ரி­கள் பிள்­ளை­க­ளில் நல­னில் அக்­க­றை­கொண்டு உட­ன­டி­யாக போராட்­டத்தை முடி­வுக்­குக் கொண்­டு­வ­ர­வேண்­டும் என்று சங்­கம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

இதே­வேளை, வடக்கு மாகாண தனி­யார் பேருந்­துச் சங்­கத்­தின் கீழ் பதி­வில் உள்ள 531 பேருந்­து­க­ளும் தற்­போது மக்­க­ளின் சேவைக்­காக கள­மி­றக்­கப்­பட்­டுள்­ள­தாக அதன் தலை­வர் எஸ்.சிவ­ப­ரன் தெரி­வித்­தார்.

“யாழ்ப்­பா­ணக் குடா­நாட்­டில் மட்­டும் தற்­போது 590 சிற்­றூர்­தி­கள் பதி­வில் உள்­ளன. வழ­மை­யாக நாள் ஒன்­றிற்கு 200 தொடக்­கம் 250 சிற்­றூர்­தி­களே சேவை­யில் ஈடு­ப­டும். தற்­போது 350ற்கும் மேற்­பட்ட சிற்­றூர்­தி­களை சேவை­யில் ஈடு­ப­டுத்­தி­யுள்­ளோம். இதே­நே­ரம் சாதா­ரண நாள்­க­ளில் 15 நிமி­டத்துக்­கு ஒரு சேவை இடம்­பெ­று­வதே வழ­மை­யா­கும்.

இரு நாள்­க­ளாக இலங்­கைப் போக்­கு­வ­ரத்­துச் சபை­யின் பணிப் புறக்­கணிப்­பை­ய­டுத்து 10 நிமி­டத்துக்­கு ஓர் சேவை இடம்­பெ­று­கின்­றது” என்று யாழ். மாவட்ட கூட்­டி­ணைக்­கப்­பட்ட தனி­யார் பேருந்­து­க­ளின் இணை­யத் தலை­வர் பொ.கெங்­கா­த­ரன் தெரி­வித்­தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget