பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுவதுடன் ஏனைய மதங்களுக்கும் சம உரிமைகளை வழங்க பின்னிற்கப்போவதில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஏழாவது சர்வதேச பெளத்த மாநாடு நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்றது. அஸ்கிரிய மல்வத்து மாநாயக தேரர்களின் தலைமையில் 47 நாடுகளின் பெளத்த மதத் தலைவர்கள் மற்றும் சமய அமைப்புகளின் உறுப்பினர்கள் கலந்துகொண்ட இந்த பெளத்த மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.
மாநாட்டில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிடுகையில்
சர்வதேச பெளத்த மாநாட்டினை இலங்கையில் நடத்துவது குறித்து நாம் மகிழ்ச்சியடைகின்றோம். பெளத்த கொள்கையில் ஐக்கிய நாடாக நாம் வாழ்ந்து வருகின்றோம். பெளத்த பின்னணியினை கொண்ட, பெளத்த கலாசாரத்தை கொண்ட நீண்டகால பெளத்த அடையாளம் கொண்ட நாடாக இலங்கை விளங்கிவருகின்றது. இன்று உலகில் பல்வேறு குழப்பங்கள், யுத்தங்கள், முரண்பாடுகள் எழுந்துள்ளன என்றால் உலகில் அறம் சாராத கொள்கையே காரணமாகும். உலகம் தொழிநுட்பத்தில், நாகரிகத்தில் மாத்திரம் வளந்துள்ள போதிலும் அவை தொடர்பில் பேசப்பட்டு வருகின்ற போதிலும் மதம், அறம் என்பதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும். இவை பெளத்த தர்மத்தில் கூறப்பட்டுள்ளன. இயற்கை சீற்றம், மாறுபட்ட காலநிலை, சமூக அழிவுகள் என்பவற்றை அன்றே புத்தர் முன்வைத்துள்ளார். உலகின் பல்வேறு பல்வேறு பிரச்சினைகளுக்கு பௌத்தத்தில் தீர்வு உள்ளது.
இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் ஆகிய மதங்களிலும் இந்த சமூக நோக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே இந்த பெளத்த மாநாட்டின் மூலமாக நாம் இவற்றினை உலகுக்கு வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்துள்ளதை எண்ணி நாம் பெருமை கொள்கின்றோம். இந்த நாட்டில் சகல மதங்களும் இணைந்து சமமாக வாழக்கூடிய ஒரு சூழல் உருவாக்கப்பட வேண்டும். அதேபோல் பௌத்தம் அடையாளப்படுத்தப்பட்டு அதற்கமைய நாடு இயங்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். மிக நீண்டகால யுத்தத்தை எதிர்கொண்ட நாடு என்ற வகையில் எமது நாட்டில் சமூக இன ஒற்றுமையினை பலப்படுத்தி, ஒரு இணைந்த சமூகமாக முன்னோக்கி செல்ல, எதிர்கால சந்ததியினர் அமைதியாக வாழவேண்டிய வகையில் பெளத்த கொள்கைக்கு அமைய நாம் செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மாநாட்டில் உரை நிகழ்த்துகையில்,
இவ்வாறானதொரு சர்வதேச பெளத்த மாநாடு இலங்கையில் நடத்தப்படுவதும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் வகையில் 47 நாடுகளின் பெளத்த மத தலைவர்கள் மற்றும் துறவிகள் எமது மாநாயக்க தேரர்களுடன் இணைந்து செயற்படுவதும் மிகவும் மகிழ்ச்சிகரமான விடயமாக நான் கருதுகின்றேன். உலகில் பௌத்தம் சமாதானத்தை உறுதிப்படுத்தும் சமயமாகும். இதில் நாம் எவ்வாறு அறத்தை பின்பற்ற வேண்டும், சமூகத்தில் எம்மாலான சேவைகள், ஒரு பெளத்தன் எவ்வாறு நெறிப்படுத்தப்பட வேண்டும் என்பதை பௌத்தம் எமக்குக் கற்றுத்தருகின்றது.
இன்று உலக நாடுகளில் பௌத்தம் அனைவராலும் ஏற்றுகொள்ளப்பட்டு போற்றப்படும் ஒரு மதமாக மாற்றம் கண்டுள்ளது என்றால் அதற்கு பெளத்தத்தில் கூறப்பட்டுள்ள அறநெறி கொள்கையே காரணமாகும். இலங்கையில் பௌத்தம் மிக நீண்டகால வரலாற்றினை கொண்டுள்ளது. அசோகா சக்கரவர்த்தி மூலமாக இலங்கையில் பௌத்தம் உருப்பெற்றதை அடுத்து மிக நீண்டகால வரலாறு ஒன்றை தோற்றுவித்துள்ளது. அன்றில் இருந்து பௌத்தம் இலங்கையின் பிரதான மதமாக அடையாளபடுத்தப்பட்டுள்ளது. அதில் மாற்றம் இல்லை. எப்போதும் பெளத்த மதத்திற்கே முன்னுரிமை வழங்கப்படும். அதே நிலையில் இலங்கையில் உள்ள ஏனைய சிறுபான்மை மக்களின் மதங்களுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகின்றது. தொடர்ந்தும் அதை நாம் பேணிப் பாதுகாப்போம். இந்த நாட்டில் பௌத்தம் பிரதான மதமாக உள்ள அதே நிலையில் ஏனைய மதங்களுக்கும் சம அந்தஸ்து வழங்கப்படும். நாட்டின் சமாதானாம் அமைதியும் அதிலேயே தங்கியுள்ளது. அமைதியாக மக்கள் வாழக்கூடிய வகையில் பெளத்த மத கொள்கைகளை நாட்டில் மேலும் பலப்படுத்தி சமாதானத்தை உருவாக்குவதாகவும் அவர் குறிப்பிட்டர்
Post a Comment