Ads (728x90)

இலங்கை போக்­கு­வ­ரத்­துச் சபை­யின் பேருந்து சேவை­கள் இன்­றும் வடக்கு மாகா­ணம் முழு­வ­தும் இடம்­பெ­ற­மாட்­டாது எனச் சபை­யின் வட பிரா ந்­தி­யத் தொழிற்­சங்­கத் தலை­வர் ஆர்.வாம­தே­வன் தெரி­வித்­தார்.

சபை­யின் வட­பி­ராந்­திய முகா­மை­யா­ளர் உபாலி கிரி­வத்­துட்­டுவ மற்­றும் பிராந்­திய பாது­காப்பு அலு­வ­லர் வி.சுரேந்­தர் ஆகி­யோரை உட­ன­டி­யாக இட­மாற்­றக்­கோரி போக்­கு­வ­ரத்­துச் சபை­யின் வட­பி­ராந்­தி­யத் தொழிற்­சங்­கம் நேற்று பணிப் புறக்­க­ணிப்­புப் போராட்­டத்தை அறி­வித்­தது.

அது இன்­றும் தொட­ரும் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
‘‘தொழிற்­சங்­கத்­தி­னு­டைய கோரிக்­கை­கள் நிறை­வேற்­றப்படாத நிலை­யில் இன்­றும் வடக்கு முழு­வ­தும் இலங்­கைப் போக்­கு­வ­ரத்­துச் சபை­யின் பேருந்­து­கள் சேவை­யில் ஈடு­ப­டாது’’ என வாம­தே­வன் தெரி­வித்­தார்.

‘‘தொழிற்­சங்­கத்­தி­ன­ரால் முன்­னெ­டுக்­கப்­ப­டும் இந்­தப் போராட்­டத்தை டிசெம்­பர் 13ஆம் திக­தியே நடத்­தத் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது. எனி­னும் அந்­தக் காலப்­ப­கு­தி­யில் ஜி.சி.ஈ. சாதா­ரண தரப்­ப­ரீட்சை இடம்­பெ­ற­வுள்­ளது.

மாண­வர்­க­ளின் நலன்­க­ரு­தியே நேற்று பணிப்­பு­றக்­க­ணிப்பு முன்­னெ­டுக்­கப்­பட்­டது. அது இன்­றும் தொடர்­கி­றது’’ என்று அவர் மேலும் தெரி­வித்­தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget