Ads (728x90)

உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லைப் பிற்­போ­டு­வ­தில் அர­சுக்­குள் சில சக்­தி­கள் தொடர்ந்து முயற்­சித்­துக் கொண்­டி­ருக்­கும் நிலை­யில் தேர்­தலை எப்­ப­டி­யும் நடத்­தியே தீரு­வது என்­ப­தில் தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வும் பிடி­வா­த­மா­கவே உள்­ளது.

நீதி­மன்­றத் தடை­கள், நிர்­வா­கச் சிக்­கல்க­ளால் தேர்­தல் வைக்­க­மு­டி­யா­மல் போகும் சபை­கள் தவிர்ந்த எஞ்­சிய சபை­க­ளில் தேர்­த­லைத் திட்­ட­மிட்­ட­ படி ஜன­வ­ரி­யில் நடத்தி முடிப்­பது என்று ஆணைக்­குழு முடிவு செய்­துள்­ள­தா­கத் தெரி­கின்­றது. இது தொடர்­பான ஆணைக்­கு­ழு­வின் தெளி­வான நிலைப்­பா­டும் அரச உயர் மட்­டத்துக்குத் தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.

நீதி­மன்­றி­னால் இடைக்­கால தடை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­ப­டாத 93 உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­த­லுக்­கான அறி­விப்பை நாளை திங்­கட்­கி­ழமை வெளி­யி­டு­வது என்று தேர்­தல்­கள் ஆணைக்­குழு நேற்­றுத் தீர்­மா­னித்­தது. அதன்­படி ஜன­வரி மாதம் 29ஆம் திகதி திட்­ட­மிட்­ட­வாறு இந்­தச் சபை­க­ளுக்கு தேர்­தல் நடத்­தப்­ப­டும்.

இந்த ஏற்­பா­டு­க­ளுக்கு அமை­வாக தேர்­தல் நடை­பெற்­றால் வடக்கு மாகா­ணத்­தில் சாவ­கச்­சேரி நகர சபைக்கு மாத்­தி­ரமே தேர்­தல் இடம்­பெ­றும் என்று தேர்­தல்­கள் ஆணைக் குழு தெரி­வித்­தது.

உள்­ளூ­ராட்சி அமைச்­ச­ரி­னால் கடந்த பெப்­ர­வரி மாதம் வெளி­யி­டப்­பட்ட வர்த்­த­மானி அறி­வித்­த­லுக்கு டிசெம்­பர் 4ஆம் திகதி வரை நீதி­மன்­றம் இடைக்­கா­லத் தடை விதித்­துள்­ளது. இத­னால் ஜன­வரி 29ஆம் திகதி உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தல் நடத்த முடி­யாத சூழல் ஏற்­பட்­டி­ருந்­தது. இத­னை­ய­டுத்து தேர்­தல்­கள் ஆணைக்­குழு உட­ன­டி­யாக நேற்­றுக் கூடி ஆராய்ந்­தது.

நாட்­டில் 336 உள்­ளூ­ராட்சி மன்­றங்­கள் உள்­ளன. நீதி­மன்­றத் தடை­யி­னால் 203 உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கு ஜன­வரி 29ஆம் திகதி தேர்­தல் நடத்த முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது. எஞ்­சிய 133 உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளி­லும் 40 உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­த­லை­யும் இப்­போ­தைய நிலை­யில் நடத்த முடி­யாது. அந்த 40 உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளின் வர்த்­த­மானி அறி­விப்­பி­லும் உள்­ளூ­ராட்சி அமைச்­சர் திருத்­தங்­கள் மேற்­கொள்ள வேண்­டி­யுள்­ளது.

எந்­தப் பிரச்­சி­னை­யும் இல்­லாத 93 உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கும் தேர்­தல் ஆணைக்­குழு ஏற்­க­னவே திட்­ட­மிட்­ட­வாறு ஜன­வரி 29ஆம் திகதி தேர்­தல் நடத்த ஆணைக்­குழு தீர்­மா­னித்­துள்­ளது. இந்­தத் தேர்­த­லுக்­கான அறி­விப்பு, மற்­றும் வேட்­பு­ம­னுக் கோர­லுக்­கான அறி­விப்பு என்­பன நாளை திங்­கட் கிழமை வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளது.

இதற்கு அமை­வாக வடக்­கில் சாவ­கச்­சேரி நகர சபைக்கு மாத்­தி­ரமே தேர்­தல் நடத்த முடி­யும். கிழக்கு மாகா­ணத்­தில், ஏறா­வூர் நக­ர­சபை, ஏறா­வூர்­பற்று பிர­தேச சபை, கோர­ளைப்­பற்று பிர­தேச சபை, மண்­முனை பிர­தேச சபை ஆகி­ய­வற்­றுக்கு மாத்­தி­ரம் தேர்­தல் நடத்த முடி­யும்.

இதே­வேளை உள்­ளூ­ராட்சி அமைச்சு 40 உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கும் உரிய திருத்­தங்­களை மேற்­கொண்டு உட­ன­டி­யாக வர்த்­த­மா­னி­யில் பிர­சு­ரிக்க நட­வ­டிக்கை எடுத்­தால், வடக்­கில் வலி.வடக்கு பிர­தே­ச­சபை, வலி.தெற்­குப் பிர­தேச சபைக்கு மாத்­தி­ரம் தேர்­தல் நடத்த முடி­யும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget