Ads (728x90)

மெடிற்­ற­ரே­னி­யன் கட­லில் இலங்கை உட்பட பல நாடு­க­ளைச் சேர்ந்த 764 ஏதிலிக­ளு­டன் படகு நேற்று முன்­தி­னம் வெள்­ளிக்கிழமை மீட்­கப்­பட்டுள்­ளது. 23 பேரின் சட­லங்­க­ளும் இருந்­த­தாக இத்­தா­லியக் கட­லோ­ரப் பொலிஸ் பேச்­சா­ளர் தக­வல் வெளி­யிட்­டுள்ளார்.
மத்­திய மெடிற்­ற­ரே­னி­யன் கட­லில் நேற்­று­முன்­தி­னம் அதி­கா­லை­யில் இந்­தக் கடி­ன­மான மீட்­புப்­பணி இடம்­பெற்­ற­தாக அவர் குறிப்­பிட்­டார்.
ஆறு மீட்பு நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தா­க­வும், 764 குடி­யேற்­ற­வா­சி­கள் பாது­காப்­பாக கப்­ப­லில் இருந்து மீட்­கப்­பட்­ட­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.
இத்­தா­லியை நோக்­கிச் சென்று கொண்­டி­ருந்த 764 குடி­யேற்­ற­வா­சி­கள் இத்­தா­லியக் கட­லோ­ரப் பொலி­ஸா­ரால் மீட்­கப்­பட்டு, டிசி­யோற்றி என்ற கப்­ப­லின் மூலம், தென்­ப­குதித் துறை­மு­க­மான ரெக்­கியோ கலாப்­ரி­யா­வுக்குக் கொண்டு செல்­லப்­ப­டு­வ­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.
இந்­தக் கப்­ப­லில் 8 பேரின் சட­லங்­க­ளும் கொண்டு செல்­லப்­ப­டு­வ­தாகக் கூறப்­ப­டு ­கி­றது.பட­கில் இருந்து மீட்­கப்­பட்ட குடி­யேற்­ற­ வா­சி­கள், இலங்கை, சகாரா, பாகிஸ்­தான், சிரியா, ஜோர்­தான், ஏமன், மொராக்கோ, நேபா­ளம், அல்­ஜீ­ரியா, எகிப்து, பங்­க­ளா­தேஷ், லெப­னான் ஆகிய நாடு­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் என்­றும் இத்­தா­லியக் கட­லோ­ரப் பொலிஸ் பேச்­சா­ளர் தக­வல் வெளி­யிட்­டுள்­ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget