Ads (728x90)

இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சோ.சேனா­தி­ரா­சா­வின் மகன் கலை­ய­மு­தன், வலி. வடக்­குப் பிர­தேச சபைக்­கான தேர்­த­லில் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி சார்­பில் போட்­டி­யி­டு­கி­றார்.

வலி. வடக்­குப் பிர­தேச சபை­யின் வட்­டா­ரம் ஒன்­றில் அவர் நேரடி வேட்­பா­ள­ரா­கக் கள­மி­றங்­க­வுள்­ளார். தேர்­த­லில் போட்­டி­யி­டு­வ­தற்­கான வேட்­பு­ம­னு­வில் அவர் ஏற்­க­னவே கையெ­ழுத்­திட்­டு­விட்­டார் என்­றும் அறி­ய­மு­டி­கின்­றது.
முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச குடும்ப அர­சி­யல் ஈடு­ப­டு­கின்­றார் என்­றும், முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுரேஸ் பிரே­ம­சந்­தி­ரன் தனது சகோ­த­ரரை அர­சி­ய­லில் கள­மி­றக்கி குடும்ப அர­சி­ய­லில் ஈடு­ப­டு­கின்­றார் என்­றும் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி கடந்த காலங்­க­ளில் குற்­றச்­சாட்டு முன்­வைத்­தி­ருந்­தது.

இவ்­வா­றா­ன­தொரு நிலை­யி­லேயே, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை சோ.சேனா­தி­ரா­சா­வின் மகன் கலை­ய­மு­தன் உள்­ளூ­ராட்­சி­மன்­றத் தேர்­த­லில் கள­மி­றங்­கி­யுள்­ளார்.

இந்­தி­யா­வில் தங்­கி­யி­ருந்த அவர் அங்­கேயே பாட­சாலை மற்­றும் கல்­லூ­ரிப் படிப்­பு­க­ளை­யும் பட்­டப்­ப­டிப்­பை­யும் முடித்­தார். சில வரு­டங்­க­ளுக்கு முன்­னரே நாடு திரும்­பி­யி­ருந்­தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget