Ads (728x90)

சாவ­கச்­சேரி நக­ர­ச­பைக்­கான வேட்­பு­ம­னு­வைத் தாக்­கல் செய்ய வந்த மகிந்­த­வின் சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­னணிக் கட்­சி­யி­னர் இறுதி நேரத்­தில் தமது முயற்­சி­யைக் கைவிட்­டுத் திரும்­பி­னர்.

தமது வேட்­பா­ளர் பட்­டி­ய­லில் இருந்த பெயர் ஈ.பி.டி.பி.யின­ரால் ஏற்­க­னவே தாக்­கல் செய்­யப்­பட்ட வேட்­பா­ளர் பட்­டி­ய­லில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­த­மை­யைக் கண்டு வேட்­பு­ ம­னுவை நேற்­றுத் தாக்­கல் செய்­யா­மல் பின்­வாங்­கி­னார்­கள். சாவ­கச்­சேரி நகர சபைக்­கான வேட்­பு­ம­னுத் தாக்­கல் கடந்த 11ஆம் திகதி ஆரம்­ப­மா­னது. நாளை 14ஆம் திகதி மதி­யம் வரை­யில் இடம்­பெ­ற­வுள்­ளது.

இந்­தச்­ச­பைக்கு போட்­டி­யி­டு­வ­தற்­காக ஈ.பி.டி.பி. தனது வேட்­பு­ம­னுவை நேற்­றுக் காலை தாக்­கல் செய்­தது.

சாவ­கச்­சேரி நகர சபைக்­கான தமது வேட்­பு­ம­னுத் தாக்­கல் நேற்று மாலை இடம்­பெ­றும் என்று சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­ன­ணி­யி­ன­ரால் ஊட­கங்­க­ளுக்கு நேற்று அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­துக்கு நேற்று மாலை வருகை தந்த அந்­தக் கட்­சி­யி­னர், தமது வேட்­பு­ம­னு­வில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள ஒரு­வ­ரின் பெயர், ஈ.பி.டி.பியி­ன­ரன் வேட்­பா­ளர் பட்­டி­ய­லில் இருந்­ததை அவ­தா­னித்­துள்­ள­னர்.

இத­னை­ய­டுத்து, சாவ­கச்­சேரி நக­ர­ச­பைக்­கான வேட்­பு­ம­னுவை சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­னணி நேற்­றுத் தாக்­கல் செய்­ய­வில்லை.

Post a Comment

Recent News

Recent Posts Widget