Ads (728x90)

வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் கே.சயந்­த­னுக்­கும், இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தென்­ம­ராட்சி அமைப்­பா­ளர் க.அருந்­த­வ­பா­லனுக்­கும் இடை­யி­லான முறு­கல் இன்­ன­மும் தீர்ந்­த­பா­டில்லை என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

சாவ­கச்­சேரி பிர­தேச சபைக்­கான வேட்­பா­ளர் தெரிவு தொடர்­பி­ல் நேற்­றைய தின­மும் குழப்­பம் ஏற்­பட்­டுள்­ளது.

சாவ­கச்­சேரி பிர­தேச சபைத் தேர்­த­லில் போட்­டியிடு­வ­தற்­கான வேட்­பா­ளர் தெரி­வுக் கூட்­டத்தை கட்­சி­யின் தென்­ம­ராட்சி அமைப்­பா­ள­ரான க.அருந்­த­வ­பா­லன் தனது வீட்­டில் வைத்­துள்ள கட்சி அலு­ வ­ல­கத்­தில் நடத்­தி­யுள்­ளார்.
இந்­தக் கூட்­டத்­தில் கலந்­து­கொள்­வ­தற்­கா­கச் சென்ற வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் கே.சயந் தனை, நடப்­பது ஒரு தனிப்­பட்ட கலந்­து­ரை­யா­டல் என்று கூறி அங்­கி­ருந்­த­வர்­கள் திருப்பி அனுப்­பி­யுள்­ள­னர்.

எனி­னும் வேட்­பா­ளர் தெரிவு தொடர்­பில் அங்கு ஆரா­யப்­பட்­ட­தா­கச் சயந்­த­னின் தரப்­பில் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இதற்­கி­டையே தான் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யில் தொடர்­வதா இல்­லையா என்­பது தொடர்­பில் கட்­சித் தலை­மை­யு­டன் பேசு­வ­தற்­காக மூவர் கொண்ட குழு ஒன்றை அருந்­த­வ­பா­லன் தெரி­வு­செய்­துள்­ளார் என்று கூறப்­ப­டு­கின்­றது.

Post a Comment

Recent News

Recent Posts Widget