Ads (728x90)

உள்ளூராட்சித் தேர்தலிலிருந்து ஒதுங்குவதாக நாம் ஒரு போதும் கூறவில்லை என்று தெரிவித்தார் புளொட் அமைப் பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் இடையில் சபைகள் தொடர்பில் பேச்சு இடம்பெற்ற போது, வலிகாமம் தெற்குப் பிரதேச சபையை எவ்வாறு முதன்மையாகக் கோரி னோமோ அதேபோன்று வலிகாமம் மேற்குப் பிரதேச சபையையும் கோரியது உண்மைதான்.

வலிகாம் மேற்கு பிரதேச சபை ஒரு தேர்தல் தொகு திக்குள் தனித்துள்ள சபை என்ற ரீதியில் அந்தத் தொகு தியை பிரதிநிதித்து வப்படுத் தும் நாடாளுமன்ற உறுப் பினர் சார்பில் அந்தச் சபை ஒதுக்கீடு செய்யப்பட வேண் டும் என்று தமிழ் அரசுக் கட்சி கடுமையாக நின்றதும் உண்மையான விடயம்.

வலிகாமம் மேற்கு பிரதேச சபையை தமிழ் அரசு கட்சி முழுமையாக எடுத்துக்கொண்டபோதும் பிறிதொரு சபையை விட்டுக்கொடுக்கவும் முன் வந்தனர். இருப்பினும் நான் அதை விரும்பவில்லை. என்னைப் பொறுத்தவரையில் சபைகளின் எண்ணிக்கைக்காக நாம் அடிபடவில்லை. அது நோக்கமும் இல்லை.

எடுக்கும் சபைகளிற்கு சரியான நேர்மையான கட்டுப்பாடான வேட்பாளர்களையும் நியமிக்கும் பொறுப்பும் உள்ளது. இதில் ஏதாவது குறைகள் ஏற்படின் பின்னர் அதற்கான பொறுப்பையும் சுமக்கத் தயாராக இருந்தல்வேண்டும்.

இந்தக் காரணத்தினால் வேறு வலி. மேற்குத் தவிர்ந்த வேறு ஒரு சபை வேண்டாம் எனத் தெரிவித்தேன். நாம் தேர்தலில் இருந்து ஒதுங்கியதான தகவல் தவறானது. ஏனைய சபைகளில் எமக்கு ஒதுக்கப்பட்ட விகித அடிப்படையிலான வேட்பாளர்கள் நிறுத்தப்படுகின்றனர் – என்றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget