
இந்நிலையில், இன்று (டிச.,22) சசிகலா, அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி, அவரது மகள் ப்ரீத்தா ரெட்டி ஆகியோருக்கு விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பி உள்ளது. சசிகலா, 15 நாட்களுக்குள் விசாரணை கமிஷன் முன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதாப் ரெட்டி மற்றும் ப்ரீத்தா ரெட்டி 10 நாட்களுக்குள் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் ஜெ.,க்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான மருத்துவ அறிக்கையை 10 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அப்பல்லோ நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஜெ., மரணம் தொடர்பாக விசாரணையை கமிஷன் ஜனவரி 2ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
Post a Comment