Ads (728x90)

யாழ்ப்­பா­ணம் நாக­வி­காரை விகா­ரா­தி­ப­தி­யின் உடல் தமிழ் ஆராய்ச்சி மாநாட்­டில் படு­கொலை செய்­யப்­பட்­ட­வர்­க­ளின் நினை­வுத் தூபி அருகே இன்று தக­னம் செய்­யப்­ப­ட­வுள்­ளது.

அதற்­கான ஏற்­பா­டு­களை இரா­ணு­வத்­தி­னர் செய்து வரு­கின்­ற­னர். அந்­தப் பகு­தி­யில் தக­னம் செய்­வ­தற்­கான மேடை மற்­றும் பந்­தல் அமைப்­புக்­கள் என்­ப­வற்றை இரா­ணு­வத்­தி­னர் அமைத்­த­னர்.

விகா­ரா­தி­ப­தி­யின் உடலை முற்­ற­வெ­ளி­யில் தக­னம் செய்­வ­தற்கு யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யி­டம் அனு­மதி கோரப்­பட்­டி­ருந்­தது. மாந­கர சபை அதற்கு அனு­மதி வழங்­க­வில்லை.

தமிழ் ஆராய்ச்சி மாநாட்­டில் படு­கொலை செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்­காக அமைக்­கப்­பட்ட நினை­வுத் தூபிக்­கும் கோட்­டைக்­கும் இடைப்­பட்ட பகு­தி­யில் விகா­ரா­தி­ப­தி­யின் உட­லைத் தக­னம் செய்­யத் தீர்­மா­னிக்கப்­பட்­டது.
இந்த இடம் தொல்­பொ­ருள் ஆராய்ச்­சித் திணைக்­க­ளத்­துக்­குச் சொந்­த­மா­னது. அங்கு தக­னம் செய்ய கொழும்பு அரசு அனு­மதி வழங்­கி­யுள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

விகா­ரா­தி­பதி ஞான­ரத்ன தேரர் சுக­வீ­னம் கார­ண­மாக கொழும்பு சிறி ஜெய­வர்த்­த­ன­புர மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டி­ருந்­தார்.

சிகிச்சை பய­னின்றி கடந்த செவ்­வாய்க்­கி­ழமை உயி­ரி­ழந்­தார்.
அவ­ரது உடல் உலங்­கு­வா­னூர்தி மூலம் நேற்­று­முன்­தி­னம் யாழ்ப்­பா­ணம் கொண்­டு­வ­ரப்­பட்­டது. நாக­வி­கா­ரை­யில் மக்­கள் அஞ்­ச­லிக்­காக வைக்­கப்­பட்­டது. இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று நடை­பெ­ற­வுள்­ளன.

Post a Comment

Recent News

Recent Posts Widget