Ads (728x90)

புதுக்­கு­டி­யி­ருப்பு பிர­தேச சபைக்­குப் போட்­டி­யிட இருந்த பெண் ஒரு­வ­ரைத் தடுத்து வைத்து அச்­சு­றுத்­திய குற்­றச்­சாட்­டில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பைச் சேர்ந்த ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டார்.

புதுக்­கு­டி­யி­ருப்பு பொலி­ஸில் மேற்­கொள்­ளப்­பட்ட முறைப்­பாட் டுக்கு அமை­வா­கவே சந்­தே­க­ந­பர் கைது செய்­யப்­பட்­டார். இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் பொலி­ஸார் தெரி­வித்­த­தா­வது:

உள்­ளூ­ராட்­சி­மன்­றத் தேர்­த­லில் புதுக்­கு­டி­யி­ருப்பு பிர­தேச சபைக்கு புளொட் அமைப்­பின் சார்­பில் போட்­டி­யிட பெண் வேட்­பா­ளர் ஒரு­வரை வடக்கு மாகாண விவ­சாய அமைச்­சர் சிவ­னே­சன் தெரிவு செய்­துள்­ளார். வேட்­பு­ம­னு­வில் கையெ­ழுத்­தி­டு­வ­தற்கு  புதன்­கி­ழமை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­மோ­க­னின் அலு­வ­ல­கத்­திற்கு அவர் சென்­றார்.

அலு­வ­ல­கத்­தி­லி­ருந்த நபர் ஒரு­வர், பெண் வேட்­பா­ள­ருக்கு கொலை அச்­சு­றுத்­தல் விடுத்­தார். அவரை வேறு இடத்­திற்­குப் பல­வந்­த­மாக அழைத்­துச் சென்று தடுத்து வைத்­துள்­ளார். நேற்­று­முன்­தி­னம் மாலையே விடு­வித்­துள்­ளார்.
பாதிக்­கப்­பட்ட பெண் இன்று (நேற்று) பொலிஸ் நிலை­யத்­திற்கு வந்து முறைப்­பாடு பதிவு செய்­தார். அவரை அச்­சு­றுத்­திய நபரை நாம் கைது செய்­துள்­ளோம். பாதிக்­கப்­பட்ட பெண்ணை மருத்­து­வப் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்த அறி­வு­றுத்­தி­யுள்­ளோம் – என்று குறிப்­பிட்­டார்­கள்.

முல்லைத்தீவில் கடத்தி செல்லப்பட்ட பெண் வேட்பாளர் தனக்கு நடந்ததை கூறுகிறார். 
https://www.facebook.com/page.tamil.5/videos/2020670408218546/?hc_ref=ARTtQ_6HNM9ZhJHkO1tJTH4z6ztuDEUhVAIk-LaOmjt0aOGSaVCdYw_iBtq1OsqGfhs&pnref=story

Post a Comment

Recent News

Recent Posts Widget