Ads (728x90)

ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்­கும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சிக்­கும் இடை­யில் செய்­து­கொள்­ளப்­பட்ட உடன்­ப­டிக்கை இன்­று­டன் காலா­வ­தி­யா­கி­றது.
சர்ச்­சைக்­கு­ரிய பிணை­முறி விசா­ரணை அறிக்கை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டம் நேற்­றுக் கைய­ளிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில்,அரச தலை­வர்

அடுத்து எடுக்­கும் நட­வ­டிக்­கை­யில்­தான் கூட்டு அர­சின் எதிர்­கா­லம் தங்­கி­யுள்­ளது என்று அரச தரப்­புச் செய்­தி­கள் கூறு­கின்­றன.

2015ஆம் ஆண்டு ஓகஸ்ட மாதம் 18ஆம் திகதி நடை­பெற்ற நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் இரு கட்­சி­க­ளும் பெரும்­பான்­மைப் பலத்தை பெற முடி­யாது போனது. கூட்டு அரசு அமைக்­கப்­பட்­டது. கூட்டு அரசை அமைப்­ப­தற்­கா­கச் செய்­து­கொள்­ளப்­பட்ட உடன்­ப­டிக்கை இன்­று­டன் காலா­வ­தி­யா­கின்­றது.
இரு கட்­சி­க­ளுக்­கும் இடை­யில் கூட்டு அரசை மீண்­டும் தொடர்­வ­தற்­கான உடன்­ப­டிக்­கை­யில் கைச்­சாத்­தி­டு­வது தொடர்­பாக வெளிப்­ப­டை­யான பேச்சு எது­வும் நடக்­க­வில்லை.

எதிர்­வ­ரும் பெப்­ர­வரி மாதம் நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லின் பின்­னரே கூட்டு அரசு தொடர்­பான உடன்­டிக்கை விட­யங்­கள் ஆரா­யப்­ப­டும் என்று அமைச்­சர் சுசில் பிரேம ஜயந்த கூறி­யி­ருந்­தார்.

தேர்­த­லில் பின்­னர் இது குறித்து கலந்­து­ரை­யா­டத் திட்­ட­மி­டப்­பட்­டுள்ள போதும், பிணை­முறி விவ­கா­ரத்­தில் அடுத்­த­கட்­ட­மாக அரச தலை­வர் எடுக்­க­வுள்ள நட­வ­டிக்­கை­களே கூட்டு அர­சின் இருப்­பைத் தீர்­மா­னிக்­கும் கார­ணி­க­ளா­கத் தற்­போது மாறி­யுள்­ளன.

அதே­வேளை, உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தல், ஜெனி­வாத் தொடர், மாகாண சபைத் தேர்­தல், பொறுப்­புக்­கூ­றல் போன்ற விட­யங்­க­ளால் அடுத்த ஆண்டு அர­சுக்கு அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தும் ஆண்­டாக அமை­யும் என்று எதிர்­வு­கூ­ற­ப­டு­கின்­றது.

Post a Comment

Recent News

Recent Posts Widget