Ads (728x90)

சுதந்­தி­ரக் கட்­சி­யை ஒன்­றி­ணைக்­கும் செயற்பா­டு­கள் முழு­மை­யா­கச் சிதைந்­து­விட்­ட­தாக அந்­தக் கட்­சி­யின் செய­ல­ரும் அமைச்­ச­ரு­மான துமிந்த திச­நா­யக்க தெரி­வித்­தார்.

அநு­ரா­த­பு­ரத்­தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை நடை­பெற்ற நிகழ்­வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

தற்­போது சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி இரண்­டாக உடைந்­துள்­ளது. இரண்டு அணி­யி­ன­ரை­யும் ஒன்­றாக இணைத்­துக்­கொள்­வது தொடர்­பில் பேச்­சுக்­கள் எழுந்­தன. நாங்­கள் மிக­வும் மகிழ்ச்­சி­யாக இருந்­தோம். எமக்­கி­டை­யில்­எவ்­வி­த­மான பிரச்­சி­னை­க­ளும் இல்லை, வீணாக முரண்­ப­ட­வேண்­டிய அவ­சி­ய­மில்லை என்று கரு­தி­னோம்.

அனை­வ­ரும் ஒன்­று­ப­ட­வேண்­டும் என்­ப­தில் உறு­தி­யா­கச் செயற்­பட ஆரம்­பித்­தோம். சுதந்­தி­ரக் கட்­சி­யி­னர் ஒன்­று­ப­ட­வேண்­டும் என்­ப­து­தான் எமது கருத்து. நான் இன்று ஒரு கருத்­தை­யும் நாளை இன்­னொரு கருத்­தை­யும் கூற­வில்லை. நாம் ஒன்­று­ப­ட­வேண்­டும் என்­ப­தில் உறு­தி­யாக இருக்­கின்­றோம். இந்த ஒன்­று­ப­டும் செயற்­பாட்­டிற்­காக அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன பல முயற்­சி­களை எடுத்­தார்.

அவ­ரு­டைய முயற்­சி­யில் அதி­யுச்­ச­மான இறுதி முயற்­சி­யொன்­றை­யும் முன்­னெ­டுத்­தி­ருந்­தார். அதில் யாரும் தலை­யீ­டு­க­ளையோ தடுப்­புக்­க­ளையோ செய்­ய­வில்லை. ஆனால் அந்த முயற்சி தோல்­வி­ய­டைந்­தது.

அவ்­வாறு தோல்­வி­ய­டைய கார­ணம் யார்? சுதந்­தி­ரக் கட்­சி­யின் உறுப்­பி­னர்­களை வேறொரு கட்­சிக்கு வரு­மாறு அழைப்­ப­து­தான் புத்­தி­சா­லித்­த­மான விட­யமா? அதுவா கட்சி மீது கொண்­டி­ருக்­கும் பற்று? அதுவா கட்­சிக்கு அவர்­கள் வழங்­கும் மரி­யாதை? இவ்­வா­றான நில­மை­யால்­தான் ஒன்­று­ப­டும் செயற்­பாடு முற்­றா­கச் சிதைந்து போயுள்­ளது  என்­றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget