Ads (728x90)

உள்­ளூ­ராட்சி சபைக்­குப் பிழை­யின்றி வேட்­பு­ம­னு­வொன்­றைத் தாக்­கல் செய்­யத் தெரி­யாத தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு அதி­கா­ரத்தை எதற்­குக் கோரு­கின்­றது?  இவ்­வாறு ஜாதிக ஹெல உறு­மய கேள்வி எழுப்­பி­யுள்­ளது.

வேட்­பு­ம­னு­வைத் தாக்­கல்­செய்­யத் தெரி­யா­த­வர்­க­ளுக்கு உள்­ளூ­ராட்சி சபை­க­ளைக் கொடுப்­ப­தற்­குப் பதி­லாக அபி­வி­ருத்­தி­களை முன்­னெ­டுப்­ப­வர்­க­ளுக்கு தமிழ் மக்­கள் ஆத­ர­வ­ளிக்­க­வேண்­டும் என்­றும் ஜாதிக ஹெல உறு­மய வலி­யு­றுத்­தி­யுள்­ளது. ஜாதிக ஹெல உறு­ம­ய­வின் ஊட­கப்­பேச்­சா­ள­ரும் மேல்­மா­காண சபை உறுப்­பி­ன­ரு­மான நிசாந்த சிறி­வர்­ண­சிங்க இது குறித்து மேலும் தெரி­வித்­த­தா­வது:

உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லுக்­காக தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு கிழக்­கில் தாக்­கல் செய்­தி­ருந்த இரண்டு பிர­தேச சபை­க­ளுக்­கான வேட்­பு­ம­னுக்­கள் நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. பிழை­யின்றி உள்­ளூ­ராட்சி சபைக்கு வேட்­பு­ம­னு­வைக்­கூட தாக்­கல்­செய்ய முடி­யாத கூட்­ட­மைப்­பி­னர்­தான் தமிழ் மக்­க­ளுக்கு அதி­கா­ரத்­தைக் கோரு­கின்­ற­னர்.

வடக்கு, கிழக்­கில் வாழும் தமிழ் மக்­கள் இன­வா­தம் பேசு­ப­வர்­க­ளைத் தெரி­வு­செய்­யாது தமக்­கான அபி­வி­ருத்­தி­களை முன்­னெ­டுப்­ப­வர்­க­ளுக்கு உள்­ளூ­ராட்சி சபை­க­ளைக் கொடுக்­க­வேண்­டும் – என்­றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget