Ads (728x90)

உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஆச­னப் பங்­கீடு தொடர்­பில், முதன்­மைப் பங்­கா­ளிக் கட்­சி­யான இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் இரண்­டாம் நிலைத் தலை­வர்­கள், மாவட்ட நிர்­வா­கி­கள் மட்­டத்­தில் பெரும் அதி­ருப்தி நில­வு­கின்­றது.

ஒற்­றுமை என்ற பெய­ரில், பங்­கா­ளிக் கட்­சி­க­ளுக்கு அதி­க­ள­வான உள்­ளூ­ராட்சி மன்­றங்­களை, கூட்­ட­மைப்­பின் தலைமை மற்­றும் தமிழ் அர­சுக் கட்­சி­யின் உயர் பீடத்­தி­னர் தாரை­வார்த்­துள்­ள­தாக அவர்­கள் குற்­றஞ் சுமத்­தி­யுள்­ள­னர்.

உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லுக்­கான தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஆச­னப் பங்­கீட்­டில் முதல் சுற்­றில் 80 சத­வீத இணக்­கம் எட்­டப்­பட்­டி­ருந்­தது. இரண்­டாம் சுற்­றில் ஏற்­க­னவே எட்­டப்­பட்ட இணக்­க­மும் இல்­லா­மல்­போ­னது.
இத­னை­ய­டுத்து பங்­கா­ளிக் கட்­சி­க­ளுள் ஒன்­றான ரெலோ, இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யு­டன் இணைந்து தேர்­தலை எதிர்­கொள்ள முடி­யாது என்று அறி­வித்­தி­ருந்­தது.

இத­னை­ய­டுத்து ஏற்­பட்ட பிணக்கை சரி­செய்­யும் நோக்­கு­டன், கொழும்­பில்
தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் கூட்­டம் நடத்­தப்­பட்­டது.

எதிர்­கட்­சித் தலை­வ­ரும், கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தலை­மை­யில் நடை­பெற்ற கூட்­டத்­தில் பங்­கா­ளிக் கட்­சித் தலை­வர்­க­ளும் பங்­கேற்­றி­ருந்­த­னர்

Post a Comment

Recent News

Recent Posts Widget