வடக்கு, கிழக்கு மாகாணங்களின் 8 மாவட்டங்களில் தனித்துக் களமிறங்கியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையிலான 4 நாள்கள் மாவட்ட ரீதியாக வேட்பாளர்களை ஒன்றிணைத்துத் தொடர்ச்சியான கூட்டங்களை நடத்தவுள்ளது என்று தெரியவருகின்றது.எதிர்வரும் 28ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் அதனை அடுத்து வரும் நாள்களில் முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களிலும் 30ஆம் மற்றும் 31ஆம் திகதிகளில் கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் கருத்தரங்குகள் நடத்தப்படவுள்ளது.
இந்தச் செயற்பாட்டுகள் நிறைவடைந்த கையோடு தேர்தல் அறிக்கை வெளியீடு செய்யும் தினம் இறுதி செய்யப்படவுள்ளது என்றும் தெரியவருகின்றது.
Post a Comment