Ads (728x90)

இரு மாகா­ணங்­க­ளில் வாழும் மக்­கள் விரும்­பும்­போது மாகா­ணங்­கள் இணை­ய­லாம். அது மக்­க­ளின் விருப்­பப்­ப­டியே நடக்­க­லாம் என்று தெரி­வித்­தார் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன்.

மனித உரி­மை­கள் மற்­றும் புதிய அர­சி­யல் அமைப்பு தொடர்­பான கலந்­து­ரை­யா­டல் நேற்று வவு­னி­யா­வில் நடை­பெற்­றது. அதில் வடக்கு– கிழக்கு மற்­றும் மலை­ய­கத்தை சேர்ந்த மூவின இளை­ஞர்­க­ளும் கலந்துகொண்­ட­னர்.

இளை­ஞர்­க­ளால் கேட்­கப்­பட்ட கேள்­வி­ க­ளுக்­கான பதில்­க­ளை­யும் அது தொடர்­பான விளக்­கங்­க­ளை­யும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் வழங்­கி­னார்.

“தற்­போது உரு­வாக்­கப்­ப­ட­வுள்ள அர­ச­மைப்­பில் கூறப்­ப­டு­கின்ற ஒரு விட­யம் வடக்கு - கிழக்கு மாகா­ணங்­க­ளின் இணைப்பு. இது அவ­சி­யமா என் பது தொடர்­பில் உங்­கள் கருத்து என்ன?”- என்று கேள்­வி­யெ­ழுப்­பப்­பட்­டது.

அதற்­குப் பதி­ல­ளித்த சுமந்­தி­ரன் தெரி­வித்­த­தா­வது அர­ச­மைப்­பின் 13ஆவது திருத்­தம் வந்­த­போது ஒரு தற்­கா­லிக இணைப்பு ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. அது 18 வரு­டங்­கள் நீடித்­தது. அதற்கு முன்­ன­ரும் 1957ஆம் ஆண்டு பண்டா – செல்வா ஒப்­பந்­தத்­தில் இணைப்பு சாத்­தி­ய­மா­வ­தற்­கான ஒரு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

இது நீண்­ட­கா­ல­மாக இருந்து வரு­கின்ற ஒரு நிலைப்­பாடு. அத­னா­லேயே அது தொடர்­பில் இப்­போது பேசப்­ப­டு­கின்­றது. புதிய அர­ச­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்­கை­யில் இந்த இணைப்­புக்கு மூன்று வழி­கள் கொடுக்­கப்­பட்­டுள்­ளன.

இரண்டு மாகா­ணங்­கள் ஒன்று சேர்­வ­தாக இருந்­தால் அந்­தந்த மாகா­ணங்­க­ளில் வாழு­கின்­ற­வர்­கள் அதற்கு இணங்­கி­னால் இணை­ய­லாம் என்­கின்ற ஒரு வழி இருக்­கின்­றது. அதைச் செய்­தால் எமது நாட்­டில் மாகா­ணங்­க­ளி­னு­டைய எண்­ணிக்­கைக் குறை­ய­லாம். அது மக்­க­ளு­டைய விருப்­பப்­படி நடக்­க­லாம். அர­ச­மைப்­பில் அதற்­கான ஏற்­பாட்­டிலே மக்­கள் விரும்­பி­னால் ஒன்­றி­ணை­ய­லாம் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­து–­என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பதி­ல­ளித்­தார்.

மற்­றொரு கேள்­விக்­குப் பதி­ல­ளித்த அவர் தெரி­வித்­த­தா­வது
சிங்­கள மக்­கள் மத்­தி­யில் உரை­யாற்­று­கின்­ற­போது எங்­க­ளுக்கு சமஸ்டி வேண்­டும் என்று சொல்லி அவர்­களை வெல்ல முடி­யாது. அதற்­கான கார­ணங்­களை சரி­யான முறை­யிலே சொல்­ல­வேண்­டும்.

வாக்­கா­ளர்­க­ளைக் கையில் வைத்­தி­ருக்­க­வேண்­டும் என்­பது தான் என்­னு­டைய நோக்­க­மாக இருந்­தால் சந்­தே­கம் எழாத வகை­யில் என்­னா­லும் செயற்­ப­ட­மு­டி­யும். வீர வச­னம் பேசு­கின்ற ஏனைய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் போன்று நானும் இருக்­க­லாம்.

Post a Comment

Recent News

Recent Posts Widget