ஆமதாபாத்: குஜராத், இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று (டிச.,18) எண்ணப்பட்டு வருகின்றன. இரு மாநிலங்களிலும் பா.ஜ., அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கிறது. குஜராத்தில் தொடர்ந்து பா.ஜ., 6வது முறையும் இமாசல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி பா.ஜ., ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது.ஓட்டு எண்ணிக்கை துவங்கிய சில மணி நேரம் பா.ஜ., - காங், இடையே கடும் போட்டி நிலவியது. சற்று நேரம் பா.ஜ., பின்னடைவை சந்தித்தாலும், சிறிது நேரத்திலேயே மீண்டும் முன்னிலைக்கு திரும்பியது பா.ஜ.,
குஜராத்தில் மொத்தமுள்ள 182இடங்களில் பெரும்பான்மையை பெற 92 இடங்கள் தேவை. அந்த வகையில் பா.ஜ., 100 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதனால் குஜராத்தில் மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது. குஜராத்தில் 1998 ம் ஆண்டு முதல் பா.ஜ.,வே ஆட்சி செய்து வருகிறது. இந்த வரலாற்று சாதனை மீண்டும் தக்கவைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 6வது முறையாக குஜராத்தில் பா.ஜ., ஆட்சிஅமைக்கிறது. .
Post a Comment