
இந்நிலையில், கல்லூரியில் பயிலும் சுமார் 110 மாணவிகள் மாயமாகி இருப்பதாக நைஜீரிய அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது, அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவிகள் அனைவரும் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டிருப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், அரசு இதை உறுதிப்படுத்தவில்லை. கடந்த 2014-ம் ஆண்டு, நைஜீரியாவின் சிக்போக் பகுதியில் உள்ள பள்ளியிலிருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவிகளை போகோ ஹராம் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். அதன் பின்னர், அரசு நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் மாணவிகள் விடுவிக்கப்பட்டனர்.
Post a Comment