தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவை மறுசீரமைப்பு நடவடிக்கை என்பது தலைவலிக்கு தலையணையை மாற்றுவதைப் போன்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை மாற்றம் குறித்து கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்காத அமைச்சர்கள் பலரை மாற்றினாலும், அரசாங்கத்தின் சுயரூபம் என்னவென்பதை மக்கள் நன்கு அறிந்தே வைத்துள்ளனர். இந்த அமைச்சர்களின் மாற்றத்துடனாவது மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதைத்தான் இந்த அரசாங்கம் செய்ய வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அமைச்சரவை மாற்றத்தினூடாக மக்களுக்கு சேவை செய்யும் விதம் குறித்து நாம் அவதானித்துக் கொண்டே உள்ளோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment