Ads (728x90)

இந்திய அளவில் பாகுபலி-2 படத்திற்கு பிறகு பிரபல நடிகராகி விட்டார் பிரபாஸ். அதனால் ஹிந்தியில் இருந்தும் அவருக்கு சில பட வாய்ப்புகள் வந்தன. அதில், கரண் ஜோகரின் படமும் ஒன்று. சாஹோ படத்திற்கு பிறகு அவர் கரண் படத்தில் நடிக்கயிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்த படத்தை தள்ளி வைத்து விட்டார் பிரபாஸ்.

சாஹோவிற்கு பிறகு தெலுங்கில் மீண்டும் ஒரு காதல் கதை கொண்ட படத்தில் நடிக்கிறாராம் பிரபாஸ். அந்த படத்தையும் முடித்த பிறகு தான் ஹிந்தி படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம். இதை கரண் ஜோகரிடம் தெரிவித்து விட்டாராம் பிரபாஸ். ஆக, 2020-ல் பிரபாஸ் பாலிவுட்டுக்கு செல்வார் என்று தெரிகிறது.

Post a Comment

Recent News

Recent Posts Widget