
அடையாறு அபிராமபுரம் அருகே போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெள்ளை நிற சொகுசு கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்தது போல் தாறுமாறாக சென்றது. உடனடியாக அந்தக் காரை நிறுத்திய போக்குவரத்து போலீசார், ஓட்டுநரை இறங்கும் படி வலியுறுத்தினர். ஆனால், ஓட்டுநர் இருக்கையில் இருந்த நடிகை காயத்ரி ரகுராம், காரில் இருந்து இறங்க மறுத்தார். சுவாசக் கருவி சோதனையில் காயத்ரி ரகுராம் மது அருந்தியது தெரியவந்தது.
இதையடுத்து காவலர் ஒருவரை வைத்து காரை இயக்கி, காயத்ரி ரகுராமை மகாலிங்கபுரத்தில் உள்ள அவரது வீட்டில் போக்குவரத்து போலீசார் இறக்கி விட்டனர். பின்னர் காயத்ரி ரகுராமின் காரை அபிராமபுரம் காவல்நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மேலும் காயத்ரி ரகுராமிற்கு 3 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதித்தனர். அபராத தொகையை நேற்று செலுத்திய பிறகு நடிகை காயத்ரி ரகுராம் தனது காரை காவல்நிலையத்தில் இருந்து எடுத்துச் சென்றார்.
Post a Comment