Ads (728x90)

 ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் இருந்தவர் தான் என்றும் பிரதமர் பதவி தனக்கு பெரிய விடயமல்ல எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்ற அமர்வில் விசேட உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னாள் அரசாங்கத்தினால் நாட்டின் பிரச்சினையைத் தீர்க்க முடியாத காரணத்தினால், ஜனாதிபதியால் நான் பிரதமராக நியமிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் பேசிய பிரதமர், சப்தமிடுவதன் மூலம் நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்ற முடியாது எனக் கூறினார்.

பாராளுமன்றத்தில் நிலவும் பிரச்சினை தொடர்பான தீர்வை வழங்குவதற்கான சந்தர்ப்பத்தை மக்களுக்க வழங்க வேண்டும் என்பதற்காக, பொதுத் தேர்தலை நடாத்த வேண்டும். எனவே, பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இதன்பின்னர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் விசேட உரையை நம்பமுடியாதெனத் தெரிவித்து, ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கொண்டுவந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பை மேற்கொள்ள முயற்சித்த சந்தர்ப்பத்தில், அங்கு அமளிதுமளி ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பாராளுமன்ற சபையிலிருந்து சபாநாயகர் வௌிநடப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget