Ads (728x90)

வடமாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட பரீட்சையில் சித்திபெற்று நேர்முகத் தேர்வில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேயினால் வழங்கப்பட்டது.

யாழ் மாவட்டச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது.

முகாமைத்துவ உதவியாளர்கள், விவசாய போதனாசிரியர்கள், பயிற்சியாளர்கள், கடல்நீர் வளத்துறை போதனா ஆசிரியர்கள் என மொத்தம் 82 பேருக்கான நியமனக் கடிதங்களை ஆளுநர் இதன்போது வழங்கினார்.

இந்த நிகழ்வில் ஆளுநரின் செயலர் இ.இளங்கோவன்,உதவிச் செயலர் ஏ.எக்ஸ் செல்வநாயகம் விவசாய அமைச்சின் செயலர் க.தெய்வேந்திரம், பதில் பிரதம செயலாளர் சரஸ்வதி மோகனதாஸ், இ.வரதீஸ்வரன் மாகாணசபை செயலாளர், ரூபினி வரதலிங்கம் மகளீர் விவசாய அமைச்சு, வடமாகாண திணைக்கள ஆணையாளர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget