Ads (728x90)


மட்டக்களப்பு, வவுணதீவு காவல்துறை பிரிவில் கடமையில் இருந்த வேளையில் இன்று (30) அதிகாலை இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

வவுணதீவு காவல்துறை நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரும், சிங்கள இனத்தைச் சேர்ந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவருமே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் வவுணதீவு காவல்துறை நிலையத்திலிருந்து சுமார் 500 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த வேளையிலே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.

மரண விசாரணையின் பொருட்டு இன்று காலை ஸ்தலத்திற்கு வருகை தந்த நீதிபதி மற்றும் உதவி காவல்துறை அத்தியட்சகர் பிரிவினர்
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மரணமடைந்த தமிழ் காவல்துறை உத்தியோகத்தர் தினேஸ் பெரியநீலாணையைச் சேர்ந்தவர் எனவும், இவர்கள் இருவரும் புதிதாக காவல்துறையில் இணந்தவர்கள் எனவும் தெரிய வருகின்றது.

கொலையாளிகள் இவர்களைச் சுட்டுவிட்டு மரணமடைந்த இரண்டு காவல்துறையினரிடமும் இருந்த 2 கைத்துப்பாக்கிகளையும் எடுத்துச் சென்றுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரிவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறை பொலிஸ்மா அதிபரின் பணிப்பில் சிஐடி குழுவொன்று விசாரணைக்காக வவுணதீவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget