சபாநாயகரின் செயற்பாடு தொடர்பில் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது.
இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வுகளை பார்வையிடும் பார்வையாளர் பகுதிகளில் ஊடகவியலாளர்களை தவிர எவரும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இன்றைய பாராளுமன்ற அமர்வின்போது நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலை காரணமாக சுற்றுலா துறையின் சரிவு தொடர்பில் ஒத்திவைப்பு யோசனை முன் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment