Ads (728x90)

பாராளுமன்றத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் ஐந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், இவை தொடர்பான விசாரணை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தின் சிசிரிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணைகள் நடைபெறுவதாகவும், விசாரணைகளின் முன்னேற்றம் சம்பந்தமாக சட்ட மா அதிபரிடம் தெரிவித்து ஆலோசனை பெற்றுக் கொள்ள உள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் விசாரணை இடம் பெற்றுக் கொண்டிருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget