Ads (728x90)

செவிப்புலனற்றோருக்கான சர்வதேச இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

இத்தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை எதிர் கொண்டு இலங்கை அணி மோதியது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 145 ஓட்டங்களை பெற்றது.

இதன் மூலம் இந்திய அணிக்கு வெற்றியிலக்காக 146 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது. 146 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணி 17.5 ஓவர்களை மாத்திரம் எதிர் கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 109 ஓட்டங்களை மட்டும் பெற்ற நிலையில் தோல்வியைத் தழுவியது.

Post a Comment

Recent News

Recent Posts Widget